Tuesday, July 29, 2008

மூலாதார சக்கரம் - ROOT/BASE CHAKRA

மூலத்திற்கு ஆதாரமானது இந்த சக்கரம்.
முதுகெலும்பின் விளும்பில் இருக்கிறது.
(அதனால் தான் ஆங்கிலத்தில் ROOT/BASE CHAKRA)

இந்தச் சக்கரத்தில் அன்னையுடன் தனயன்
கணேசனும் அமர்ந்திருப்பதாகச் சொல்வார்கள்.

கணேசனடி பற்றுவோர்களுக்கு எதுவும்
விக்னம் இல்லாமல் நடை பெறுமே.

குண்டலினி சக்தி பாம்பாக சுருண்டு
கிடப்பது இங்குதான்.

யோகாசனத்தில் நாடிசுத்தி என்று ஒன்று
உண்டு. நம் சுவாசக்குழாயை சுத்தம் செய்து
நல்ல சீரான சுவாசத்தைத் தரும்.

நாடி சுத்தி செய்தால்தான் மூலாதாரத்திலிருந்து
குண்டலினியை எழுப்ப முடியும். அதன் பிறகுதான்
சக்தி ஸஹஸ்ராரா வரை மேலெழும்பும்.










லலிதாவில் சொல்லப்பட்டிருக்கும் ஸ்லோகங்கள்.

38, 106

மூலாதரைக நிலயா ப்ரம்மக்ரந்தி விபேதினி
மணிபூராந்தருதிதா விஷ்ண்டு க்ரந்தி விபேதினி.



Muladharaika nilaya brahmagranthi vibhedini
Manipurantarudita vishnugranthi vibhedini .. 38



Muladharaika nilaya: Whose chief residence
is the Muladhara.
Brahmagrandhi vibhedini: Who in Her ascent
from the Muladhara breaks through the
Brahma-grandhi (the Barrier of Brahma
to the subtle dimension).
Manipurantarudita: Who then emerges
in the Manipura – chakra.
Vishnugranthi vibhedini: Who then breaks
through the Vishnu – granthi (the barrier
to still subtler dimensions).


*****************************************************


மூலாதாரம்புஜாரூடா பஞ்சவக்த்ராஸ்தி ஸம்ஸ்திதா
அங்குசாதி ப்ரஹரணா வரதாதி நிஷேவிதா.


Muladharambujarudha panchavaktrasthi samsthita
Ankushadi praharana varadadi nishevita .. 106




Muladharabujarudha: Who assumes Her place
in the Muladhara Chakra, described as a
lotus of four petals.
Panchavaktra: Who exhibits five faces.
Sthisamsthita: Who presides over bones
in living creatures.
Ankushadi praharana: Who is armed with a
goad and other weapons.
Varadadi nishevita: Who is attended on by
Varada and three other Saktis.


மூலாதாரத்தில் நிறைந்திருக்கும் அன்னை
குண்டலினி சக்தியாக ஒவ்வொரு சக்கரத்திலும்
நுழைந்து மேலெழும்புகிறாள்.

தண்டுவடத்தை இருப்பிடமாக கொண்டவள்,
உயிரினங்களின் எலும்பாக விளங்குகிறாள்.


இந்தச் சக்கரங்களை தியானித்து
செய்யப்படுவதுதான் குண்டலினி தியானம்.

அபார சக்தியைத் தரவல்லது.

ரெய்கி முறையில் அந்தந்த சக்கரத்தை
நோக்கித்தான் சக்தி அளிக்கப்பட்டு சிகிச்சை
அளிக்கப்படும்.

(உதாரணம்: தைராய்டு பிரச்சனைக்கு
கழுத்துப்பகுதியில் சிகிச்சை)


இத்துடன் சக்கரங்களைப் பற்றிய இந்தத் தொடர்
பதிவு நிறைவுப் பெற்றது.


இந்தப் பதிவுகள் எனது ரெய்கி குரு
திரு.சியாமள் ராவ் அவர்களுக்கு காணிக்கையாக.


ஸர்வ ஜனோ சுகினோ பவந்து.

(எல்லோரும் இன்புற்றிருப்பது தவிர யான் ஒன்றும்
அறியேன் பராபரமே)

2 comments:

வேளராசி said...

விநாயகர் அகவலில் அருமையாக விளக்கியுள்ளனர்.

Sivamjothi said...

சும்மா இரு - யோகத்தில் இருந்து ஞானத்திற்கு
http://sagakalvi.blogspot.in/2011/10/self-realization.html