Monday, January 19, 2009

பூ பூத்த திருநாள்......

தெனாலி கமலஹாசனே பரவாயில்லை என்று சொல்லும்
அளவுக்கு எதற்கெடுத்தாலும் பயம்!!!!

ரோடில் போகும்போது கைகளை இறுக்க பிடித்துக்
கொள்வாள்.

தூங்கும்போது கூட அப்பா கைகளை பிடித்துக்கொள்ள
வேண்டும்.
விமான பயணங்களின் போது தந்தையும் மகளும்தான்
அருகில் அமர்ந்து கொள்வார்கள்.டேக் ஆஃப், லேண்டிங்
இரண்டின் போதும் ஒரே டயலாக் தான்.
Nana please hold my hands!!!!

இப்படி எல்லாம் பயப்படக்கூடாதம்மா என்று மெல்ல
எடுத்துச் சொல்வோம்.

ஆனான் கடந்த 6 மாதங்களாக எனக்கு பயங்கர
ஆச்சரியம்.

தானே தனியாக கீழே இறங்கிச் செல்கிறாள்.

மெல்ல ரோட்டை க்ராஸ் செய்து கடைக்கு
போய் தனக்கு தேவையானதை வாங்கி
வருகிறாள்.

4 தெரு தள்ளி இருக்கும் டைலர் கடைக்கு
தான் தான் தனியே போவேன் என்று
அடம்பிடிக்கிறாள்(!!!)

10 நாள் முன்பு வீட்டுக்கு அருகில் இருக்கும்
ஷ்டேஷனரி ஷாபில் மேப் இல்லையென்று
மெயின் ரோடை க்ராஸ் செய்து போய்
வாங்கிவந்திருக்கிறாள்!!!!!

எங்கே போயிற்று அந்த பயம்??


நான் வளர்கிறேனே மம்மி என்று
சொல்லாமல் சொல்கின்றன அவளது
செயல்கள்!!

அண்ணனுடன் தனக்கும் தனி ரூம்
வேண்டுமென்று போட்டி போடுகிறாள்!!

நானே செய்து கொள்வேன்! என்று
சொல்லி செய்கிறாள்.

ஓ!! என் அம்மா வளர்ந்துவிட்டாள்.

இன்று எங்கள் அம்ருதம்மாவிற்கு
பிறந்தநாள்.

எல்லா வளமும் பெற்று பல்லாண்டு
வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்.


35 comments:

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துக்கள் ...

Kumky said...

அம்ருதாவிற்க்கு இனிய வாழ்த்துக்களும்....போட்டொ போடாததற்க்கு உங்களுக்கு எனது சிறிய கண்டனங்களும்.

ஆயில்யன் said...

பாப்பாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)))))

pudugaithendral said...

வாங்க ஜமால்,

வளமை போல் முதலில் நீங்கள்.

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

pudugaithendral said...

போட்டோ போட யோசனையா இருக்கு.

நெட்டில் ஏதும் ஏடாகூடாமாக்கிடுவோங்களன்னுதான் யோசிக்கறேன்.

வாழ்த்திற்கு நன்றிகள்

pudugaithendral said...

ஸ்கூல் போயிருக்காங்க. வந்தவுடன்

பாப்பாவுக்கு வாழ்த்தைச் சொல்லிடறேன் ஆயில்யன்.

Sanjai Gandhi said...

அம்ருதா பாப்பாவுக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்.

Sanjai Gandhi said...

//போட்டோ போட யோசனையா இருக்கு.
//

போட வேண்டாம்.

அ.மு.செய்யது said...

உங்கள் செல்ல அம்ருதாவிற்கு எங்கள் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் !!!!!

pudugaithendral said...

போட வேண்டாம்.//

:) நிச்சயம் போட மாட்டேன்.

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சஞ்சய்.

pudugaithendral said...

வாழ்த்திற்கு மிக்க நன்றி செய்யது.

அமுதா said...

அம்ருதாவிற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

//எங்கே போயிற்று அந்த பயம்??
மிக நன்று.

இராம்/Raam said...

பாப்பா'விற்கு வாழ்த்துக்கள் சொல்லிருங்க... :)

அபி அப்பா said...

vaazththukkal!!!

ராமலக்ஷ்மி said...

அம்ருதாவுக்கு மறுபடி சொல்லிக் கொள்கிறேன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

pudugaithendral said...

வாங்க அமுதா,

தைரியம் எப்பொழுது வந்தது என்பது எனக்கே புரியவில்லை.

பிள்ளைகளின் வளர்ச்சி சில நேரம் தெரிவதில்லை.

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

pudugaithendral said...

பாப்பா'விற்கு வாழ்த்துக்கள் சொல்லிருங்க... //

கண்டிப்பா சொல்லிடறேன். நன்றி இராம்

pudugaithendral said...

வாங்க அபிஅப்பா,

ரெம்ப நாள் கழிச்சு க்ரெக்டா வாழ்த்துச் சொல்ல வந்திருக்கீங்க.

மிக்க நன்றி

pudugaithendral said...

வலையுலக்க கவிக்குயிலுக்கு இங்கேயும் என்னுடைய நன்றியை தெரிவிச்சுக்கறேன்.

புதுகை.அப்துல்லா said...

vaalga valamudan,

covy my regards to her :)

நிஜமா நல்லவன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

pudugaithendral said...

டிரான்சிட்டில் இருந்தாலும் வாழ்த்துச் சொன்னதை மறக்காமல் சொல்லிவிடுவேன் அப்துல்லா.

pudugaithendral said...

தனிப்பதிவே போட்டு கலக்கியிருக்கீங்க. நன்றி நிஜமா நல்லவன்.

சந்தனமுல்லை said...

அம்ருதாவிற்கு இனிய பிறந்த்நாள் வாழ்த்துகள்!

Thamira said...

அழகுப்பதிவு.. வாழ்த்துகள் பெரிய தென்றலுக்கும் குட்டித் தென்றலுக்கும்.!

சுரேகா.. said...

அன்பு அம்ருதாவுக்கு
வாழ்த்துக்கள்!

உன் அக்கறையை
என்றும் மறவேன்..!

நல்லா இருப்படா!!!

*இயற்கை ராஜி* said...

வாழ்த்துக்கள் ...

அத்திரி said...

பாப்பவுக்கு வாழ்த்துக்கள் சொல்லிடுங்க அக்கா

pudugaithendral said...

வாங்க சந்தனமுல்லை,

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

pudugaithendral said...

வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி தாமிரா.

pudugaithendral said...

நல்லா இருப்படா!!!//

இந்த ஆசிர்வாதம் பிள்ளைக்கு கிடைத்ததில் பெருமகிழ்ச்சி சுரேகா.

pudugaithendral said...

இயற்கையின் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள்.

pudugaithendral said...

சொல்லிடறேன் அத்திரி,

மிக்க நன்றி.

மோனிபுவன் அம்மா said...

Happy Birthday da Chellam,

And my best wishes for u da thangam,

The world is in your hand only da

pudugaithendral said...

அருமையான வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள் மோனிபுவன் அம்மா.