Wednesday, May 27, 2009

எல்லோரும் சந்தோஷமா இருங்கப்பா....

இந்த மாசம் முழுக்கவே சரியா பதிவு போடலை.

விருந்தினர் வருகை, வேலைப்பளு, உடல்நிலை
சரியில்லாமல் போனதுன்னு ”வழக்கம் போல”
பதிவு எழுதலை. ரெம்ப வருத்தமா இருக்கு.
(உங்க எல்லோருக்கும் சந்தோஷமா இருந்திருக்கும்)


இதுல இப்ப சென்னைப்பயணம் வந்திருச்சு...
நாளை கிளம்பறேன்.
ஊருக்கு போயிட்டு வரும்போதே விருந்தினர்களுடன்
வந்திறங்கப்போகும் அதிர்ஷ்டசாலி நான். :))


அநேகமா ஜூன் 10 தேதி வரை அதிகமா
இந்தப்பக்கம் வரமுடியாது. முடிஞ்சப்போ
எட்டி பாக்கறேன்.

அதுவரைக்கும் ALL ENJOY.

**********************************
சென்னை பயணத்தில் பதிவர் சந்திப்புக்கு
ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு.

அப்துல்லாவை சந்திக்கப்போறேன். அப்படியே
சில நண்பர்களும் சேர்ந்துக்கறதா சொல்லியிருக்காங்க.
நடந்துச்சுன்னா உங்க வயிற்றெரிச்சலை மேலும்
அதிகமாக்க பதிவு வரும். :))))))))))

**************************************

எப்போதும் சென்னை போகணும்னா அழுவாச்சியா
வரும். பாதிநாள், மீதிநாள் மட்டும் சென்னையில
இருக்கற மாதிரி திட்டம் போட்டு கிளம்புவேன்.

இந்த முறை சென்னைப் பயணம் மகிழ்ச்சி தரக்கூடியது.
காரணம் திரு.D.Vநாரயணன்.

அயித்தானோட அயித்தான் இவர்(அக்கா ஹஸ்பெண்ட்)

ஆனால் எனக்கு அன்பான தாத்தா(அதெல்லாம்
எப்படின்னுகேட்க கூடாது. உறவு அம்புட்டுதான்)

ஒவ்வொரு முறை மும்பையிலிருந்து நான்
வரும்பொழுதெல்லாம் (எப்ப அந்த ட்ரையின்
நேரத்துக்கு வந்திருக்கு) சென்னை செண்ட்ரலில்
காத்திருந்து அழைத்துச் செல்வார்.
(அப்போது என் திருமணம் சம்பந்தமான
பேச்சுவார்த்தை இல்லை.. இல்லை.. மனதில்
கூட யாரும் நினைத்திருக்கவில்லை)

என் அன்பான நாராயணன் தாத்தா தனது
70ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
பீமரத சாந்தி விழாவில் கலந்துக்கொள்ளத்தான்
சென்னை விஜயம்.

அன்பான தாத்தா இப்போது நாத்தானாரின்
கணவர் என்ற +ம் சேர்ந்துக்கொள்ள
தாத்தா, அம்மம்மாவுக்கு சீர் செய்து
ஆசிர்வாதம் பெறச் செல்கிறேன்.

29.5.09அன்று தாம்பரத்தில் விழா.

12 comments:

நட்புடன் ஜமால் said...

மேலும்
அதிகமாக்க பதிவு வரும்\\


தாராளமா

ஏராளமா போடுங்க அக்கா

மணிநரேன் said...

அட நம்ம தாம்பரத்திலேயா..,
நல்லா என்சாய் பண்ணிட்டு ஆசிர்வாதம் வாங்கிட்டு வாங்க..:)

pudugaithendral said...

ஆஹா மி த பர்ஸ்டா. வாங்க ஜமால் வாங்க.

Template looks nice and faster//

நம்ம சஞ்ஜய் தம்பி் சொல்லிக்கொடுக்க நான் செஞ்சேன் ஜமால்

pudugaithendral said...

வாங்க மணிநரேன்,

என்சாய் பண்ணிட்டு ஆசிர்வாதம் வாங்கிட்டு வாங்க.//

நிச்சயமா

தேவன் மாயம் said...

சென்னை பயணத்தில் பதிவர் சந்திப்புக்கு
ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு.

அப்துல்லாவை சந்திக்கப்போறேன். அப்படியே
சில நண்பர்களும் சேர்ந்துக்கறதா சொல்லியிருக்காங்க.
நடந்துச்சுன்னா உங்க வயிற்றெரிச்சலை மேலும்
அதிகமாக்க பதிவு வரும். :))))))))))
//
enjoy!!

Thamira said...

தாம்பரத்துக்கா.. நானும் அந்தப்பக்கமாத்தான் ஊடு பாத்துக்கிட்டு இருக்கேன்.. (கம்பெனி இடம் மாறுது.)

மங்களூர் சிவா said...

ரைட்டு
Enjoy!!!

pudugaithendral said...

நன்றி தேவா

pudugaithendral said...

ஆஹா, நீங்களும் தாம்பரம் காரவுக ஆகப்போறீங்களா... சரி வாழ்த்துக்கள்

pudugaithendral said...

நன்றி சிவா

அன்புடன் அருணா said...

எல்லாத்தையும் நல்லபடியா முடிச்சுட்டு வாங்க!!

கட்டபொம்மன் said...

அப்படியே நம்ம பக்கமும் வந்துட்டு போங்க


கட்டபொம்மன் kattapomman@gmail.com