Monday, June 22, 2009

அப்துல்லா மாமா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்....

உங்க பாட்டு என்ன மாயம் செஞ்சுச்சுன்னு தெரியலை அப்துல்லா :))

ஆஷிஷுக்கும் அம்ருதாவுக்கும் உங்க பாட்டு எப்பவும்
மண்டையில் ஓடிகிட்டே இருக்கும் போல.

அடிக்கடி கேட்டுகிட்டே இருந்து, இப்ப அடிக்கடி
முனுமுனுக்கும் பாடலாகி போச்சு உங்க பாட்டு.

கோமா பின்னூட்டத்துல சொல்லியிருந்தது போல
எஃப் எம்கள் அலறப்போகின்றன.

பாட்டைக் கேட்டதற்கப்புறம் தான் உங்களை சந்திச்சாங்க.

பொதுவா அவங்களுக்கு பாடல்கள் தன்னிச்சையா தெரியாது.
திரையில் ஓடும்போது அல்லது கேட்கும் போது கூட
பாடித்தான் பழக்கம்.

“காதல் ஒரு பள்ளிக்கூடம் நண்பா” மட்டும் விதிவிலக்கா
முனுமுனுக்கப்படுவது ஆச்சசரியம்... :)) ஆஷிஷ் டான்ஸ்
ஆடிக்கொண்டே அந்த பாட்டைப் பாடுவது சூப்பரா இருக்கும்.

சரி மேடைக்கு ஏன் வரச்சொன்னேன்???

மேட்டர் இருக்கு. சனிக்கிழமை இசையருவி டீவியில் நடந்த
இசைக்கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் ஆகியோரின்
ராம்ப் ஷோ பார்த்துக்கொண்டிருந்தோம்.

அம்ருதா உடனே, ”நம்ம அப்துல்லா மாமா ஏன் ராம்ப்
ஷோவில் கலந்துகொள்ளவில்லை?!!” எனும் கேள்வியை
எழுப்பினாள்.

மாமா பாட்டு இப்பத்தானே ரிலீஸ் ஆகியிருக்கு?

ஆயிடுச்சுல்ல. அப்ப மாமாவும் பாடகர்தான். சோ
மாமாவும் ராம்ப் ஷோவுல வந்திருக்கணும்!!!!!
இது ஆஷிஷ்.


என்னத்த சொல்ல.

சீக்கிரமே இது மாதிரிஒரு நிகழ்ச்சியில் சுசித்ரா,
மஹதி போன்ற இசைக்குயில்களுடன் ஒரு ராம்ப் ஷோவில்
நீங்க கண்டிப்பா கலந்து கொண்டே ஆகவேண்டும்.

அப்துல்லா கண்டிப்பா மேடைக்கு வரவும்.

ஆமா சொல்லிட்டேன்.

16 comments:

நட்புடன் ஜமால் said...

ஆமா! ஆமா!

சீக்கிரமாக மேடைக்கு வரவும் ...

அமுதா said...

ஆமா! ஆமா!

சீக்கிரமாக மேடைக்கு வரவும்

H.R.அக்பர் அலி said...

யாரு அப்துல்லா???
கொஞ்சம் விளக்குங்களேன்!நல்லது உங்களின் பதிவுகள் அருமையாகவும் உபயோகமானதாகவும் உள்ளது வாழ்த்துக்கள் தென்றல்.
அக்பர் அலி HR
துபாய்

pudugaithendral said...

வாங்க HRMAN son,

அப்துல்லா எங்க ஊரு(புதுகை)காரர்.

http://pudugaithendral.blogspot.com/2009/05/blog-post_06.html இதுல அவர் பாடின் பாட்டு இருக்கு.

வாழ்த்திற்கும், முதல் வருகைக்கும் மிக்க நன்றி

Thamiz Priyan said...

ஆகா... வருங்காலத்தில் பெரிய ராப் பாடகரா மாறிடுவார் போல இருக்கே... அண்ணன் எங்கு இருந்தாலும் மேடைக்கு வரவுமாம்.

Kumky said...

:-))))

Kumky said...

அவருக்கு ஹை பிட்ச் வாய்ஸ்.
க்ரூப் இல்லாம தனியா பாடுனார்னா எனக்கு தெரிஞ்சு: ”என் அன்பே எனன்பே., கண்ணுக்குள் கவிதாஞ்சலி” போன்ற பாடல்கள் அருமையா செட்டாகும்.அதே போல சோகப்பாடல்களில் சோலோ சாங்கிற்க்கு ஏற்ற குரல்.

ஹூம் நமக்கெல்லாம் அடிச்சிக்குது.
அவரா முயற்சி எடுப்பாரான்னு சந்தேகம்தான்.

எம்.எம்.அப்துல்லா said...

அக்கா உங்களின் அன்பிற்கு மிக்க நன்றி.

காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பது போல் பாராட்டுறீங்க :)))

ஷைலஜா said...

அப்துல்லா பாடுவாரா தெரியவே தெரியாதே! என்ன தம்பி சொல்லவே இல்ல என்கிட்ட?!

pudugaithendral said...

நான் பாராட்டலை, உங்க மருமக பிள்ளைங்க தான்...

pudugaithendral said...

விடாதீங்க ஷைலாக்கா,

நல்லா கேளுங்க.. சும்மா விடாதீங்க

சண்டை போடுங்க :))

அன்புடன் அருணா said...

இன்னுமா வரல்லை????

எம்.எம்.அப்துல்லா said...

சரி!சரி! காக்கைக்கும் தன் மாமா பொன்மாமா போல :))))

pudugaithendral said...

மாமா ரொம்ப லேட்டா வந்துட்டாரு அருணா

நானானி said...

//எங்கு இருந்தாலும் மேடைக்கு வரவும்.//
நானும் அழைக்கிறேன் அப்துல்லா! உடனே வரவும்

//காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு//
பின்னே?

கார்க்கிபவா said...

//சரி!சரி! காக்கைக்கும் தன் மாமா பொன்மாமா போல //


ஆமா :))