Thursday, June 13, 2013

தீயாய் வேலை செய்த தென்றல்!!!!

என்ன நட்புக்களே எல்லோரும் சுகமா?? வெயில் ஓரளவுக்கு குறைஞ்சிருக்கா?? எங்க ஊர்ல இந்த வாட்டி கரெக்டா வருண பகவான் அட்டெண்டென்ஸ் போட்டதோட மட்டுமில்லா கட்டடிக்காம தினமும் ஒழுங்கா வந்துக்கிட்டு இருக்காரு. அதனால கூல் கூல் கிளைமேட்டில் இருக்கோம் என்பதை வெயிலில் வாடி வதங்குபவர்கள் காதில் புகை வருவதற்காக சொல்லிக்கொள்கிறேன்!!!


அதென்ன அப்படி ஒரு தலைப்புன்னு கேக்கறீங்களா??!!! கன்னாபின்னான்னு வேலைப்பளு ஏற்பட்டு போச்சு. நெஜமாவே தீயாய் வேலை செஞ்சேன். இந்த லீவுலயாவது ரெஸ்ட் எடுக்கணும்னு நினைச்சது போய் எப்பத்தையும் விடவும் ஃபுல் ஸ்விங்கில் வேலை!!!

முதல்ல ஆஷிஷிற்கு அம்மை வார்த்தது. அக்னி நட்சத்திர வெயிலோடு அம்மையும் சேர்ந்து கொள்ள பிள்ளை தவிச்சுத்தான் போச்சு.  சில நாள் ராத்திரியில் பிள்ளைக்கு வேப்பிலையால் விசிறிக்கிட்டு இருக்க, பாவம் அம்மான்னு என்னை எழுப்பாம பிள்ளை முழிச்சிக்கிட்டு உக்காந்திருந்தது.
ஆயி மகமாயி மனசு குளிர்ந்து  நல்லா இறங்கினதும் ஏழாம் நாள் முதல் தண்ணி விட்டேன்.

இரண்டாவது தண்ணி விட வேண்டிய அன்னைக்கு காலேயிலிருந்து அயித்தான் எழும்பவே முடியாம  கஷ்டப்பட்டாங்க.  வயிற்றைப்பு புரட்டிகிட்டு வாந்தியா எடுக்கறாரு!!!  7 மணியிலேர்ந்து 7.45 வரை இந்த கஷ்டம். மருத்துவ நண்பருக்கு போன் போட்டு நிலமையைச் சொல்ல இது  BPPV அப்படின்னு சொல்லி ஒரு மருந்தை எஸ் எம் எஸ் அனுப்பி வாங்கி கொடுத்து கொஞ்சம் சரியானதும் ஆஸ்பத்திரிக்கு கூட்டியாரச் சொன்னாரு.

எதிர் வீட்டில் இருப்பவங்க ஓடிப்போய் மருந்து வாங்கியாந்து கொடுத்தாப்ல.
அதுக்கு முன்னமே கொஞ்சம் எந்திரிச்சி உட்கார முடிஞ்சது அயித்தானால.
மணி 8.30 ஆகியும் அவர் எதுவுமே சாப்பிடலை!!! ரெண்டு ப்ரட் மட்டும் சாப்பிட்டு மாத்திரையை போட்டுக்கிட்டார். வாந்தி வருவது நின்னு கொஞ்சம் ஓரளவுக்கு  நார்மலா இருந்தாரு. அவசர அவசரமா சமையலை செஞ்சிட்டு, அயித்தானோட ஆஸ்பத்திரிக்கு ஓடினேன். அண்ணனுக்குத் துணையா தங்கச்சி இருந்து பாத்துக்கிட்டாப்ல.

மருத்துவ நண்பர் இன்னொரு டாக்டருக்கு எழுதி கொடுத்து போய் பார்க்க சொன்னாப்ல. பிபி லோவா இருந்தது மட்டுமில்லாம நண்பர் சொன்ன அதே

BPPV தான் இந்த தலை சுத்தலுக்கு காரணம்னு சொன்னாரு. அப்படின்னா என்னான்னு கேட்க, நம்ம காதுகள் கேட்பதற்கு மட்டுமில்ல, அதுல ஒரு லிக்விட் இருக்கும். அதுதான் நம்மை பேலன்ஸிங்கா வெச்சுக்க உதவும். அந்த
லிக்விட் கொஞ்சம் மேலேழும்பி வந்தா இந்த மாதிரி இருக்கும்.  இப்போதைக்கு பயப்படும் படி ஏதும் இல்லைன்னு சொன்னாப்ல. விக்கிபீடியா அதைப்பத்தி என்ன சொல்லுதுன்னு இங்க போய் பாருங்க தெரியும்!!


15 நாளா அயித்தான் கன்னாபின்னான்னு டூர் போனது, ஓவர் ஸ்ட்ரெஸ் உடம்புக்கு ரெஸ்ட்டே இல்லை. ஃப்ளைட், கார், ரயில்னு பயணம்.... பயணம்தான்.  ஹலோ மிஸ்டர் ரெஸ்ட் எடுங்கன்னு உடம்பு கொடுத்த வார்னிங் அதுன்னு சொல்லிட்டு மாத்திரையோட டாக்டர் பிரிஸ்கிரிப்ஷனில் 3 நாள் ரெஸ்ட்.... நோ ட்ரைவிங் அப்படின்னு எழுதி கொடுத்தாரு.


வீட்டுல பாஸ் (என்னைத்தான்) ப்ரஷரா!!! ஆபிஸ் பாஸ் ப்ரஷரான்னு டாக்டர் ஜோக் அடிக்க, சார்!! நான் பாஸ் எல்லாம் இல்ல. அயித்தானுக்கு நான் தான் அந்தரங்க காரியதரிசி, ரெப்ரஸ்ண்டேடிவ். இந்த வேலையைத்தான் ஒழுங்கா இத்தனை வருஷமா செஞ்சுகிட்டு வர்றேன்னு சொல்ல, மாசத்துக்கு எத்தனை நாள் டூர் போவிங்கன்னு அயித்தானைக்கேட்க, வீட்டுல இருக்கறது எத்தனை நாள்னு கேட்டா கரெக்டா சொல்ல முடியும் சார்னு சொல்ல, டாக்டர் என்னைப் பார்த்து நீங்க செக்கரட்டரின்னு சொன்னது கரெக்ட்தான்னு சொல்லி சிரிச்சாரு.

 நல்லா ரெஸ்ட் எடுத்துக்கணும்னு கண்டிப்பா சொல்லி அனுப்பினாரு. அந்த டாக்டருக்கு ட்ரீட் தரணும்னு நினைச்சுக்கிட்டேன். இல்லாட்டி அயித்தானாவது சேர்ந்தாப்ல 3 நாள் லீவு போட்டு வீட்டுல இருக்கறதாவது.
இதுல இன்னொரு மேட்டர் என்னன்னா வூட்டுல இருந்தாலும்  போன் அடிக்காம இருந்தது பெரிய விஷயம்.  இந்த களேபரம் முடிஞ்சு அயித்தான் திங்கள்கிழமை ஆபீஸ் போக ஆரம்பிச்சாரு. வீட்டுக்கு கிட்டத்துல தான் ஆபிஸ் ஆனாலும் மதிய சாப்பாட்டுக்கு ஒருவாட்டி வண்டியில வந்து போறது வேணாம்னு சாப்பாடு கட்டி கொடுக்க ஆரம்பிச்சேன்.

அடுத்த நாள் சாயந்திரம் அம்ருதம்மாவிற்கு அம்மை போட்டிருந்தது தெரிஞ்சது!!!  ம்ம்ம் முடியல!! ம்ம்ம் முடியலன்னு கத்தணும் போல இருந்தாலும் ஒண்ணும் செய்ய முடியாது. 3 நாள் லீவு போட்டிருந்ததால அயித்தானாலும் சீக்கிரம் வீட்டுக்கு வந்து ஹெல்ப் பண்ண முடியலை. ஆஷிஷும் அப்பதான் தேறிக்கிட்டு இருந்ததால .......... எப்படியோ கஷ்டப்பட்டு
வேலைகளை தீயாய் பாத்துக்கிட்டு இருந்தேன். இப்போ அம்ருதம்மாவுக்கு தண்ணி ஊத்தி ரெஸ்ட் எடுத்து ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சாச்சு.

ஆஷிஷ் அண்ணாவுக்கும் காலேஜ் திறந்திட்டாங்க.

அதனால இனிமேல் ஆண்டவன் அருளோட தாய்லாந்து பதிவுகள் தொடரும்.
சைக்காலஜி பதிவுகளையும் சீக்கிரமே ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கிறது.
எல்லாம் ஆண்டவன் சித்தம்.



15 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைவரும் விரைவில் பூரண நலம் அடையட்டும்... நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டு நீங்களும் தொடருங்கள்...

ராமலக்ஷ்மி said...

அனைவரும் தற்போது நலமென அறிந்ததில் ஆறுதல். புதிய கல்வி ஆண்டு சிறப்பாக அமைய ஆஷிஷ், அம்ருதா இருவருக்கும் வாழ்த்துகள்!

pudugaithendral said...

வாங்க தனபாலன்,

ஒய்வு எடுக்கணும்னு நினைச்சாலே ஏதாவது வேலை வந்திருது. என் ராசி அப்படி :)) அதனால அதிகமா வேலை செய்யாம இருக்கணும்னு வீட்டுல கண்டீஷன் போட்டிருக்காங்க. அதை மட்டும் நிறைவேத்தினா போதும்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ராமலக்‌ஷ்மி,

வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

காற்றில் எந்தன் கீதம் said...

அடக்கடவுளே இவ்வளவு நடந்துச்சா? அனைவரும் நலம் என்று அறிந்ததில் மகிழ்ச்சி. சீக்கிரமே நீங்களும் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க அக்கா.
உங்கள் அனைவருக்காகவும் நல்லூர் முருகனையும் கதிர்காமக்கந்தனையும் வேண்டிக்கொள்கிறேன்

இராஜராஜேஸ்வரி said...

இல்லத்தில் அனைவரும் நலம் பெறப் பிரார்த்தனைகள்..

ஹுஸைனம்மா said...

எல்லாரும் பூரண நலம் பெற்றது மகிழ்ச்சி. இறைவன் சித்தம்.

ஆமா, வாந்தியை மட்டுமே வைத்து, அது BPPV என்று எப்படி மருத்துவர் கண்டுபிடித்தார்? பொதுவா வாந்தி என்றதும், ஃபுட் பாய்ஸன் என்றுதானே சந்தேகம் வரும்?

pudugaithendral said...

வாங்க சுதர்ஷிணி,

பிரார்த்தனைக்கு மிக்க நன்றி. இப்ப எல்லோரும் ஓகே. :))

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க இராஜராஜேஸ்வரி,

வருகைக்கு மனமார்ந்த நன்றிகள்

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

தலை சுத்தலோட சேர்ந்து வாந்தியும் இருந்ததை வெச்சு கண்டுபிடிச்சாங்க. தலையை தூக்க முடியாம இருக்கும். பொதுவா படுத்த நிலையிலோ அல்லது சில சமயம் அண்ணாந்து பார்க்கயிலோ இப்படி வருமாம்.

வருகைக்கு மிக்க நன்றி

சாந்தி மாரியப்பன் said...

எல்லோரும் உடம்பைக் கவனிச்சுப் பார்த்துக்கோங்கப்பா..

மாதேவி said...

பிள்ளைகளுக்கு இப்படியாகிவிட்டதே.

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

இப்ப ஓகே :))

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க மாதேவி,

இதெல்லாமும் சகஜம் :))

வருகைக்கு மிக்க நன்றி

மங்களூர் சிவா said...

just now read, take care.