Saturday, September 21, 2013

சீதா கல்யாண வைபோகமே!!!....-7

வளைகாப்பு முடிந்து மணி,லீலா, சுந்தரி அவ்வா ரூபாவை பிரசவத்திற்கு அழைத்து சென்றார்கள். ரூபாவின் கணவர் அகிலும் அலுவலக வேலை இருப்பதால் அவர்களுடன் சென்றார்.

சத்திரம் பார்க்க போவதை பத்தி பேச ஆரம்பித்தார் தியாகு, உடனேயே ஷ்யாம்
” அப்பா, வர்றவங்க சொளகர்யம் முக்கியம். ரொம்ப பெருசா இருக்கேன்னு ஊர் கோடியில வெச்சா சிட்டியிலேர்ந்து வந்து போக கஷ்டம். அதனால நமக்கும் வசதிபட்டாப்ல இருக்கணும். அந்த மாதிரி பாக்கலாம்னு நினைக்கறேன்” அப்படின்னு சொன்னதும்,”சரிப்பா. அதுக்கென்ன ஒவ்வொரு சத்திரமா பாக்கத்தானே போறோம்!” என்றார் தியாகு.

அது டைம் வேஸ்ட்ப்பா. நம்ம பட்ஜட் என்ன? எத்தனை நாளைக்கு வேணும்? என்ன மாதிரி இருக்கணும் இது ப்ளான் பண்ணிக்கிட்டோம்னா, அந்த மாதிரி சத்திரங்களை மட்டும் பாத்தா சீக்கிரம் வேலை முடியும். அநாவசிய அலைச்சல் இருக்காதுப்பா, என்றதும் பத்மா,”ஷ்யாம் சொல்வதும் சரிதான். நாம சில விசேஷங்களுக்கு அந்த சத்திரங்கள் எப்படின்னு பாத்திருக்கோம்ல, அதை வெச்சு எந்த சத்திரம் நமக்கு தோது படும்னு பாக்கலாம்!!” என்றதும்
பேப்பர் பேனா எடுக்க போனான் ஷ்யாம். “இதுக்கும் பேப்பரா!! என தியாகு கேட்க, எல்லாமே எழுதி வெச்சுகிட்டா நல்லதுப்பா!” என்று சொல்லி தேவைகள் என்னவென எழுத ஆரம்பிக்க, பத்மா பானுபின்னியை பார்த்து கேட்டால்,” அத்தே! மாப்பிள்ளை வீட்டுக்காரங்க தங்க ரூம் வசதியும் இருக்கணும், அதே சமயம் வீட்டுக்கிட்டே இருந்தாதான் பால்பழம் கொடுக்க வீட்டுக்கு அழைச்சுகிட்டு வர வசதியா இருக்கும்னு நினைக்கிறேன்! நீங்க என்ன சொல்றீங்க? அப்படின்னு கேட்க ,

பானு பின்னி சொன்னார்,”ஆமாம்மா. நம்ம வீடே கொஞ்சம் புறநகர் பகுதிதான். அதனால இங்க பக்கத்துல இருக்க சத்திரங்கள் நல்லா இருக்கும்னா பார்க்கலாம் என்றது சீதா ஒரு சத்திரத்தின் பெயரை சொல்ல, ஷ்யாமும், பத்மாவும் கூட சத்திரத்தின் பெயர்கள் சொல்ல இவைகளை எழுதிக்கோ ஷ்யாம், அதோட இன்னும் ரெண்டு சத்திரமும் இருக்கு. இங்க போய் பார்ப்போம். நமக்கு பிடிச்ச சத்திரம் என்றாலும் டேட்ஸ் காலியா இருக்கணும். அதனால நேரே போய் பார்ப்போம் என்று சொல்ல, சமையலை முடிச்சு கிளம்பலமா என்றார் பத்மா.

“நீங்க கிளம்புங்கப்பா, என்னால அலைய முடியாது. நான் வீட்டுலதானே இருக்கேன். சிம்பிளா ஒரு சமையல் செஞ்சிடறேன்” என்றார் பானுபின்னி. “உங்களால முடியுமா அத்தே!” என்றார் பத்மா. மெல்ல சமைக்கலாம்மா நீ கிளம்பு என்று சொல்ல எல்லோருக்கும் சூடாக குடிக்க கலக்க போனாள் சீதா. பிறகு எல்லோரும் ரெடியாகி சத்திரம் பார்க்க போனார்கள். ஷ்யாம் வண்டி ஓட்ட பக்கத்தில் தியாகு உட்கார்ந்து கொண்டார். பின்னால் சீதாவும், பத்மாவும் உட்கார்ந்து கொண்டார்கள்.

வீட்டுக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் சத்திரத்திற்கு போனார்கள். சாப்பாட்டு தளம் கல்யாண தளத்திற்கும் மேலே. ஏறி இறங்க சிரமமாக இருக்கும் என்பதால் வேண்டாம் என்றார் பத்மா. “லிஃப்ட் இருக்கேம்மா!! என்றான் ஷ்யாம்,” நிர்மலா அத்தை சொன்னாங்கப்பா... கூட்டம் ஜாஸ்தியா இருந்தா லிஃப்ட்டையும் ஆஃப் செஞ்சு வெச்சிருவாங்களாம்”! என்றதும் அடுத்த சத்திரத்திற்கு கிளம்பினார்கள். அங்கே இவர்கள் கேட்ட தேதியில் சத்திரம் காலியில்லை. இன்னொரு சத்திரம் 2 கிமீ தூரத்தில் இருந்தது. அங்கே வசதியும் நன்றாக இருந்தது.  திருமணம் நடக்கும் இடத்திலேயே 6 ரூம். மணவறைக்கு பக்கத்திலேயே மணமகன், மணமகள் அறைக்கு தவிர 4 ரூம் இருந்தது. மேலே 12 ரூம்களும் விசாலமான ஹாலும் இருந்தது.

சாப்பாட்டு தளம் கீழேயே இருந்தது. இந்த அமைப்பு எல்லோருக்கும் ரொம்ப பிடித்திருந்தது. கீழே கார் பார்க்கிங் போல பெரிய இடம் இருந்தது அங்கேயே
காசியாத்திரை ஆகியவை செய்யவும் வசதியாக இருக்கும் என்பதுடன் பட்ஜட்டிற்குள்ளும் அடங்கவே  3 1/2 நாளுக்கு புக் செய்தார்கள். சமையல் கட்டும் நீட்டாக இருந்தது. எண்ணெய் பிசுக்கு இல்லாமல் நீட்டாக வைத்திருந்ததுடன் கேஸ் அடுப்பு, மிக்சி, கிரைண்டர் எல்லாம் இருந்தது. வாடகையுடன், பாத்திர வாடகையும் சேர்த்து தான் என்பது கூடுதல் வசதி.
எக்ஸ்ட்ரா தலையணை, போர்வை, ஜமக்காளத்திற்கும் அவர்களே ஏற்பாடு செய்து தருகிறார்கள் என்ற கூடுதல் தகவலும் உதவியாக இருந்தது. அட்வான்ஸ் கொடுத்து சத்திரத்தை புக் செய்துவிட்டு வீடு சேர்ந்தார்கள்.

பானுபின்னி சிம்பிளாக ஓமம் வத்த குழம்பு, மிளகு ரசம், கத்திரிக்காய் கூட்டு செய்து வைத்திருந்தார்.  சத்திரம் புக் செய்துவிட்டதை பானுபின்னியிடம் சொல்ல ரொம்ப சந்தோஷம்ப்பா என்றார். சாப்பாட்டு வேலை முடிந்ததும் பானுபின்னியின் பக்கத்தில் உட்கார்ந்து பத்மா சத்திரத்தை பற்றி சொன்னாள்.
பானுபின்னி தியாகுவிடம்,”சத்திரம் புக் செஞ்சிட்டோம்னு சொல்லி அவங்களுக்கு போன் போட்டு சொல்லிடுப்பா!!” என்றதும் சரி என்று போன் செய்து விவரத்தை சொல்ல,”ரொம்ப சந்தோஷம்! இனி பத்திரிகை வேலையை ஆரம்பிக்கலாம்!” என்று சொன்னார் மணி.

சாயந்திரமாக தியாகு மேரேஜ் காண்ட்ராக்ட் எடுத்து நடத்தும் தனது நண்பரை வரச்சொல்லியிருந்தார். 

தொடரும்

6 comments:

Mahi said...

விக்ரமன் படம் பார்க்கற மாதிரியே இருக்குங்க சீதா கல்யாண வைபோகம்!! எந்த தடையும் இல்லாம எல்லாமே சு(க)பமாவே போவது நல்லா இருக்கு. :)

pudugaithendral said...

வாங்க மஹி,

பிரச்சனைகள் நிஜ வாழ்க்கையில்தான் இருக்கு. கதைகளிலும் எதுக்குன்னு தான் :))

வருகைக்கு மிக்க நன்றி

மாதேவி said...

சத்திரம் புக்செய்தாகிவிட்டது.:) அடுத்து....

pudugaithendral said...

வாங்க மாதேவி,

இன்னும் நிறைய்ய இருக்கே. :))

வருகைக்கு மிக்க நன்றி

Vaishnavi said...

PART 8 YEPPA VARUM MADAM?

pudugaithendral said...

vanga vaishanavi,

veetula visheshangal. innum oru varam 10 nalil adutha part kandipa varum.

thamathathuku sorry