Wednesday, July 23, 2014

சீதா கல்யாண வைபோகமே - 9

முந்தைய பாகங்கள் மற்றும் கதை சுருக்கத்திற்கு இங்கே

பத்திரிகைகள் அடிக்க ஏற்பாடு செய்யதால் அதையும் கையோடு எடுத்துக்கொண்டு போய் கொடுத்துவிட்டு ரூபா குழந்தை புண்யாசனமும் அட்டெண்ட் செய்த மாதிரி இருக்குமே” என பத்மா சொல்ல அதுவும் சரிதான் என்று மாடல் பத்திரிகை எழுதியிருந்ததை எடுத்து சரி பார்த்துக்கொண்டார்கள். ”இங்கிலிஷ் பத்திரிகை அவங்க அடிச்சுக்கொடுக்கறாங்க. நாம ட்ரடிஷனல் மஞ்சள், ரோஸ் பத்திரிகை தான் அடிக்கப்போறோம் அதையும் கொஞ்சம் அழகா பண்ணலாமேன்னு,” சீதா சொல்ல உன் ஐடியாவை சொல்லும்மா என்றார் தியாகு.

”நல்ல மாடல் பத்திரிகையை செல்கட் செய்வோம். அதற்குள்ளே நம்ம ட்ரடிஷனல் பத்திரிகையை வெச்சு அனுப்புவோம். பார்க்கவும் நல்லா இருக்கும்,” என்றாள் சீதா.  எனக்கு ஒரு ஆசை என பத்மா சொல்ல “சொல்லும்மா என்றாள் சீதா.

ஆர்டிஸ்ட் மாயா  அவங்க அழகா பத்திரிகை டிசைன் செஞ்சிருக்காங்க. அதுல ஷ்பெஷல் என்னன்னா, பத்ததிகள் அது செய்ய வேண்டிய  காரணம் எல்லாமும் கூட இருக்கற மாதிரி செஞ்சிருக்கார். ஜீலகர பெல்லம் வைப்பதன் அர்த்தம் என்னன்னு பலருக்கு தெரியறது இல்லை. அதைப் பத்தில்லாம் அழகா புரியறா மாதிரி இருக்கற பத்திரிகை அனுப்பினா எல்லோருக்கும் தெரிஞ்சிக்க வசதியாய் இருக்குமே!” என்று சொல்லவும்,

“ நானும் பார்த்திருக்கிறேன். இத்தனை நாள் தமிழ் பத்ததி மட்டும் தான் கார்டுகள் இருந்தது. சமீபமா தெலுகு பத்ததிக்கும் கார்டு போட்டிருக்காங்க” என ஷ்யாம் சொல்லவும், “ அருமையான ஐடியா அப்படியே செய்யலாம்மா. வித்தியாசமா இருக்கும்!! என்னப்பா சொல்றீங்க என சீதா கேட்க தியாகுவும் ஓகே சொன்னார். “நீயும் ஷ்யாமும் போய் அந்த வேலையை உடனே முடிச்சிட்டு வாங்க, எனக்கும் அம்மாவுக்கும் தில்லி போக ட்ரையின் டிக்கெட் புக் செஞ்சிடறேன் என்று  சொல்ல. நேரமிச்சமாகும்பா இந்த வாட்டி ஃப்ளைட்ல போயிட்டு வாங்க. கன்ஷஷனல் ஃபேர் போட்டிருக்காங்கன்னு சொல்லி மகன் புக் செய்து கொடுத்துவிட்டு தங்கையை அழைத்துக்கொண்டு போனான்.


3 நாளில் பத்திரிகை ரெடி. முதல் பத்திரிகை குல தெய்வம் கோவிலுக்கும், இஷ்ட தெய்வ கோவில்களுக்கு எழுதி அனுப்பி விட்டு சம்மந்தி வீட்டினருக்கு தேவையான பத்திரிகைகளை எடுத்து வைத்துக்கொண்டனர். ரூபாவின் குழந்தைக்கு சின்ன பரிசும், உடைகளும் சீதா ஆபிஷ் விட்டு வரும்போது வாங்கி வந்திருந்தாள். ஷ்யாம் அம்மா அப்பாவை ஏர்போர்ட்டில்  இறக்கி விட்டு ஆபிஸ் போனார். ஏர்போர்ட்டிற்கு சம்மந்தி கார் அனுப்பியிருந்தார்.

குழந்தையின் பெயர் வைக்கும் வைபவம் சிறப்பாக நடந்தது.  குழந்தைக்கு வாங்கியிருந்த பரிசு எல்லோருக்கும் பிடித்திருந்தது. சின்ன மோதிரம் + கிளாஸ் வளையல் மோதிரம் குழந்தை விரல் சப்பினால் வாய்க்குள் போய்விடாத படி குட்டி சங்கிலி மோதிரத்திற்கும் வளையலையும் இணைத்து என சீதா பார்த்து பார்த்து வாங்கியிருந்தாள்.

பத்திரிகை பார்த்து மணிக்கு மிகவும் சந்தோஷம். பத்ததிகளை அழகாக விவரித்து இருப்பது மிகவும் பிடித்திருந்தது. திருமணத்திற்கும் இன்னும் 3 மாதமே இருப்பதால் மத்த வேலைகளை பார்க்க வேண்டுமென தியாகுவும், பத்மாவும் கிளம்பினர். பத்மாவுக்கும் தியாகுவுக்கும், துணிமணிகள் கொடுத்து மரியாதை செய்தனர். அப்பொழுது ரூபா ஒரு பார்சலை பத்மாவிடம் கொடுத்து இது சீதாவுக்கும், ஷ்யாமுக்கும் என்று சொன்னாள். உள்ளே அழகான லக்னோவி சுடிதார் செட் சீதாவுக்கும், வெள்ளியில் டிசைன் செய்த பேனா ஷ்யாமுக்கும் இருந்தது.

தொடரும்......


2 comments:

Unknown said...

pudhugai akka, why no more blogs since this one. Waiting for your next part and more news.

Uma, California

pudugaithendral said...

sorry dear,

These days either i am busy or sick. :( very soon i will start blogging. hopefully from vijayadasami :)) Thanks for stopping by