Wednesday, November 12, 2014

கவிதை வாங்கி வந்தோம்......

வேற எந்த ரூமும் காலியில்லை. மசாஜ் ரூம் தர்றேன்னு மேனஜர் சொல்ல, மசாஜ் பார்லர் பக்கம் ஏதோ ரும் இருக்கு போல அதை ரெடி செஞ்சு தருவாங்கன்னு நினைச்சா மசாஜ் டேபிள் மேல படுக்க சொன்னாப்ல. இன்னாய்யா நினைச்சுக்கினீங்கன்னு காண்டாகி கத்திட்டு, “கட்டுபடியாகுதுன்னே”னு சொல்லி கட்டின பணத்தை இரவு உணவு வரைக்கும் கழிச்சுக்கிட்டு திரும்ப கொடுக்க சொன்னோம்.

அது கஷ்டம் சார்னு சொன்னவங்க. இப்ப சத்தம் குறைஞ்ச மாதிரி இருக்கு, இருங்க பேசிட்டு வர்றேன்னு சொல்ல, அயித்தானும் கூட போனாங்க. ரிஷப்ஷன் ஆள் கிட்ட “என்ன கொடுமைங்க இது. நாங்க தான் எங்க பையர் பிறந்த நாளுக்காக ரிலாக்ஸ்டா எஞ்சாய் செய்யலாம்னு வந்தோம். இப்படி ஒரு அனுபவமா போச்சேன்னு” சொல்லிக்கிட்டு இருக்கும்போது அயித்தான் திரும்பி வந்தாக. சத்தம் ஓயவே இல்லையாம்!!!

அப்புறம் தான் அந்த மேனேஜர் சார் நீங்க மேற்கொண்டு பணம் ஏதும் கட்ட வேணாம். மாசப் டாங்க்கிட்ட எங்க ஹோட்டல் இருக்கு அங்க தங்க ஏற்பாடு செய்யறோம்னு சொல்ல அயித்தான் சரின்னு சொன்னாப்ல. அங்க போய் பணம் கொடுன்னா ஒரு பைசா கொடுக்க மாட்டோம்னு கறாரா பேசிட்டுத்தான் கிளம்பினோம். அது 5 நட்ச்த்திர ஹோட்டல்.

அர்த்த ராத்திரி அந்த ஹோட்டலுக்கு வந்தோம். செக்கின் கவுண்டர்ல கேட்டா பேந்த பேந்த முழிச்சாங்க. அப்புறம் அயித்தான் பழைய ரிசார்ட்டுக்கு போன் செஞ்சு அப்படி இப்படின்னு 45 நிமிஷத்துக்கு அப்புறம் ரெண்டு ரூம் கொடுத்தாங்க. (நாங்க நாலு பேர்ல). சரிதான்னு போய் படுத்ததுதான் தெரியும்.

காலை உணவுக்கு கீழே இறங்கி போனோம். ரூம் நம்பர் சொன்னதும் ரெஸ்டாரண்ட் மேனஜர்லேர்ந்து ஒவ்வொருத்தரா வந்து ஆஷிஷ் யாருன்னு விசாரிச்சு “ஹேப்பி பர்த்டே சொன்னாங்க”. செவ்வாய் தான் பர்த்டேன்னு சொன்னாலும் பரவாயில்லைன்னு சொன்னாப்ல. உணவு நல்லா இருந்துச்சு.

ரிஷப்ஷ்ன்ல போயி லஞ்சு முடிஞ்சதும் செக் அவுட் செய்வதா சொல்ல போனாக அயித்தான். நேற்று ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிக்கும்படி கேட்டுக்கிட்டாக. ரூமுக்கு வந்தா அயித்தானுக்கு அந்த ஹோட்டல் எம்.டி போன் செஞ்சாப்ல. மன்னிப்பு கேட்டுட்டு, மதியம் உணவு காபி ஷாப்ல இல்லாம ஜ்வல் ஆஃப் நிஷாம்ங்கற அவங்களோட ஷ்பெஷல் ரெஸ்டாரண்ட்ல கொடுக்க சொல்லியிருக்காப்லயும், தவறாம அவங்க உபசரிப்பை ஏத்துக்கும்படியும் கேட்டுக்கிட்டாரு.

கொஞ்ச நேர ரெஸ்ட் எடுத்துக்கிட்டு குளிச்சு ரெடியாகி மதிய உணவுக்கு ரெஸ்டாரண்ட் போனோம். ரூம் நம்பர் சொன்னதும் ஷ்பெஷல் டேபிள் கொடுத்தாங்க. புஃபே சிஸ்டம். அருமையான உணவு.  ஆஷிஷோட பர்த்டே ப்ரி செலிபிரேஷன் தடபுடலா நடந்துச்சு. செக்கவுட் செய்ய கவுண்டருக்கு வந்தா
ஆஷிஷ் பேர் போட்டு சாக்லெட் கேட் ஒரு கிலோ கொடுத்தாங்க.

முதல் நாள் கசப்பான அனுபவமா இருந்தது, அந்த தவறுக்கு சரிகட்ட இந்த ஹோட்டல் நிர்வாகத்தினரோட நடத்தை வித்தியாசமா, இந்த யுகத்துல இப்படியும் ஆளுங்க இருக்காங்கன்னு வியப்படைய வெச்சது.

6 comments:

கவியாழி said...

http://kaviyazhi.blogspot.com/2014/11/blog-post.html

'பரிவை' சே.குமார் said...

முதல் நாள் மோதல் இரண்டாவது நாள் அன்பு... அஹா அருமை...

கோமதி அரசு said...

ஆஷிஷ் பேர் போட்டு சாக்லெட் கேட் ஒரு கிலோ கொடுத்தாங்க.//

அருமை.
ஆஷிஷ்க்கு வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.

pudugaithendral said...

வருகைக்கு நன்றி கவியாழி கண்ணதாசன்

pudugaithendral said...

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி குமார்

pudugaithendral said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிம்மா