Monday, December 29, 2014

பை பை 2014

2014ஆம் ஆண்டின் கடைசிக்கு வந்திட்டோம். சில வருஷம் சூப்பரா இருக்கும். சில வருஷம் மிகுந்த கஷ்டங்கள் இருந்திருக்கும். வாழ்க்கையில் இன்பம் துன்பம் எல்லாம் சமம் தான்.  தெலுங்கு புத்தாண்டின் போது இதை முன்னிறுத்திதான் யுகாதி பச்சடி சாப்பிடும் பழக்கம் இருக்கு. உப்பு, துவர்ப்பு, புளிப்பு, இனிப்பு எல்லாம் கலந்த அந்த பச்சடி சாப்பிடுவதனால  வாழ்க்கையில் எது வந்தாலும் ஏத்துக்கணும்னு பெரியவங்க சொல்லிக்கொடுத்த விஷயம் அது.

பல பேர் ஆங்கில புத்தாண்டு நம்மளுடையது கிடையாது. அதை நாம கொண்டாடத்தேவையில்லைன்னு சொல்வாங்க. எல்லா புத்தாண்டும் கொண்டாடப்படவேண்டியது தான். புதிதுன்னாலே கொண்டாட்டாம் தான்.  தமிழ், தெலுங்கு, மராத்தி, மார்வாடி தனித்தனி புத்தாண்டு இருந்தாலும் எல்லோருக்கும் பொதுவா இருப்பது இந்த ஆங்கில புத்தாண்டு தான்.

2014- முன்னமே  பதிவுகள்ல சொன்ன மாதிரி என்னை ரொம்பவே பிசியாக்கிட்ட ஒரு வருஷம். அப்பாவுக்கு 70வது செஞ்சது, ரொம்ப நாளா எதிர் பார்த்திருந்த தம்பி திருமணம்னு மனதுக்கு நிறைந்த நல்ல செய்திகளை தாங்கி வந்த வருடம். ஆனா வேலை ஜாஸ்தியாகி  ஓவர் உழைப்பு உடம்புக்கு ஆவதுன்னு, அதனால ரொம்பவே பாதிக்கப்பட்டு இப்ப ரெக்கவர் ஆகிகிட்டு வர்றேன்.

ஒவ்வொரு வருஷமும் ஏதாவது புதுசா கத்துக்கணும்னு நினைப்பேன்.   இந்த வருஷம் வேலைப்பளுவினால முடியாம போயிருச்சு. அப்படியே விட்டுடக்கூடாதுன்னு, நவம்பர் மாதம் ஃபேப்ரிக் பெயிண்டிங் & எம்ப்ராய்டரி கத்துக்கிட்டேன். அந்த தூண்டுதலுக்கு முக்கிய காரணம் hand embroidery lovers & arts and crafts  அப்படிங்கற முகநூல் குருப் தான். அதுல அவங்க கைத்திறைமைகளை படம் பிடிச்சு காட்டும் போது நாமும் ஏதாவது கத்துக்கணும்னு ஆசை ஏற்பட்டு கிளாஸ் போக ஆரம்பிச்சேன். ஒரு விதத்துல  அந்த கிளாஸ் போனது என்னை மீட்டெடுத்ததுன்னு சொல்லலாம். (ஆஷிஷ் ஹாஸ்டல் போனதிலேர்ந்து ஒரு வெறுமை இருந்தது)



ரொம்ப ஷாக்கான விஷயம் அம்மம்மாவை இழந்தது. ஆனா ரொம்ப முடியாம படுத்திருந்து அடுத்தவங்களுக்கு கஷ்டத்தை கொடுக்க கூடாதுன்னு நினைச்ச அவங்க மனசை புரிஞ்சுகிட்டு அதையும் ஏத்துக்கிட்டேன். என் சமையல்களில், நான் வாழும் வாழ்வில் அம்மம்மாவோட பாதிப்பு கண்டிப்பா இருக்கும். ஜனவரியில் நடந்த பீமரத சாந்தி விழா முடிஞ்சதும் அம்மம்மா என்னை முத்தமிட்டு என் வாரிசு நீதான்னு சொன்னது வஷிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் வாங்கின மாதிரி. மாமா சொல்ற மாதிரி 200 பர்சண்ட் சரியா செஞ்சிருந்தா மட்டுமே அம்மம்மா  என்னை பாராட்டியிருப்பாங்க. இனிமேலும் அதே மாதிரி என் வாழ்நாள் மொத்தமும் ராஜத்தின் பேத்தி எனும் அடையாளத்துக்கு தக்க நான் இருக்கணும். அதற்கு அம்மம்மாவோட ஆசிகள் எப்பவும் இருக்கும்னு நம்பறேன்.


 இந்த படம் முகநூலில் சுட்டது. எவ்வளவு நிஜம்ல. அதானல நாம நம்ம பழசை மறந்துட்டு சும்ம சும்மா அந்த பக்கம் எட்டி பாக்காம இருப்போம். நம்ம பெரியவங்க இதைத்தானே அழகா பழையன கழிதலும், புதியன புகுதலும்னு சொல்லியிருக்காங்க.



நட்புக்கள் அனைவருக்கும் அட்வான்ஸா புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லிக்கறேன்.



6 comments:

வல்லிசிம்ஹன் said...

இனிமையான நினைவுகளுடன புத்தாண்டு மலரட்டும்
நல்
வாழ்த்துகள்
கலாமா

'பரிவை' சே.குமார் said...

எதோ ஒன்றை கற்றுக் கொண்டீர்களே அதுவே சந்தோஷம்தானே...

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

ஆமாம்மா. எல்லோருக்கும் எல்லா வளமும் தரும் நல்ல ஆண்டாக மலரும் என்பதுதான் என் பிரார்த்தனையும்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க குமார்,

ஆமாம் :)

வருகைக்கு மிக்க நன்றி

'பரிவை' சே.குமார் said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அம்மா...

pudugaithendral said...

தாமதமான வாழ்த்துக்கள் குமார்