Saturday, April 16, 2016

சம்மர் லீவு- பார்ட் 1

ஏப்ரல் 16 தேதிக்கு வந்தாச்சு. இனி ஸ்கூல் லீவு தான். எப்படா லீவு விடுவாங்க எந்த ஊருக்கு போகலாம்னு ப்ளானிங் எல்லாம் பலமா இருக்கும். சிலர் பிறந்த வீட்டுக்கு போய் வர இந்த சமயம் தான் கிடைக்கும். உறவுகளை  பார்த்து கொஞ்ச நாள் சந்தோஷமா இருந்திட்டு வர இந்த லீவுதான் எல்லோருக்கும் வசதி. பிள்ளைகளுக்கும் படிப்பு டென்ஷன் இல்லாம ரிலாக்ஸ்டாக இருக்க உதவும். ஒரே ஒட்டமா ஓடிக்கிட்டு இருக்கறப்ப கொஞ்சம் ஓய்வெடுக்கவும் அவசியம் தான்.

நாம பொதுவா லீவுக்கு ஊருக்கு போறதுன்னா சொந்த பந்தங்கள் இருக்கற ஊரைத்தான் மொதல்ல கிளிக் செய்வோம். தங்கறதுக்கு இடமிருக்கு. ஊர் சுத்தி பாக்குற செலவு மட்டும்தான்னு யோசிப்போம். ஆனா நாம ஒரு விஷயம் மறந்திருப்போம். அடிக்கடி அதே ஊருக்கு போறவங்களா இருந்தோம்னா நமக்கு மட்டுமல்ல அவங்களுக்கும் லீவு விடறாங்களா இவங்க இங்க வந்திடுவாங்கன்னு ஒரு எண்ணம் வர வாய்ப்பிருக்கும். சிலர் வெளிய சொல்லாம இன்முகத்தோட விருந்தோம்பல் செஞ்சு அனுப்புவாங்க. சிலர் முணுமுனுத்துக்கிட்டு செய்வாங்க.  விருந்தாளி வந்தா அதுவும் குடும்பத்தோட போனா செய்ய அவங்களுக்கு கஷ்டம் இருக்கும். இந்த வேகாத வெயில்ல நம்ம வீட்டு கிச்சன்ல நின்னு நாலு பேருக்கு சமைப்பதே கஷ்டம். இதுல விருந்தாளியும் வந்தா எப்படி இருக்கும்.

அதுலயும் சிலருக்கு ஒரு பாலிசி இருக்கும். ஆணா இருந்தா வீட்டை விட்டு வெளிய கிளம்பினா நம்ம பர்ஸை ஒபன் செய்யக்கூடாது. (சிலர் பாவம் ஓவரா செலவு செஞ்சு அவஸ்தை படறதும் உண்டு) பெண்கள்னா சமையல்கட்டு பக்கம் எட்டி பாக்க கூடாது. இப்படி இருந்தா ரொம்ப கஷ்டம்.  வந்தவங்கள ஊர் சுத்தி பாக்க கூட்டிகிட்டு போகணும். அதுவும் லோக்கல் ஆளுங்க நாம கூட வரணும்னு எதிர் பார்ப்பாங்க. ஆனா இந்த கிச்சன் வேலையை பகிர்ந்துக்கணும்னு நினைக்க மாட்டாங்க. கூடமாட உதவி செஞ்சா வீட்டுல இருக்கற பெண்களுக்கு உதவியாய் இருக்கும். அவங்க கூடவே வெளியில சுத்திட்டு வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் காபியோ இரவு சாப்பாடோ உடனே ஏற்பாடு செய்யணும்னா எப்படி இருக்கும்?

என்னோட அனுபவம் வேற மாதிரி :) ஒரு சமயம் பத்து பேர் வந்திருந்தாங்க வீட்டுக்கு. அதுக்கு தக்க என்ன சமைக்கலாமோ அந்த மாதிரி ப்ளான் செஞ்சு சமைச்சேன். கூடவே எல்லா இடத்துக்கும் வரணும்னு சொன்னப்ப என்னால அப்படி வர முடியாது, சாப்பாடு அரேஞ்ச் செய்யணும்னு சொல்லிட்டேன். எப்படி போகணும், என்னென்ன பாக்கணும் எல்லாம் சொல்லி கொடுத்து அனுப்பினேன். எந்த பிரச்சனையும் இல்லாம போய்கிட்டு இருந்தது. என்ன தோணிச்சோ என்னவோ திடும்னு நான் கிச்சன்ல ஹெல்ப் செய்யறேன்னு வந்தாங்க. ராத்திரிக்கு சப்பாத்தி செய்வோம்னு சொல்ல, என்னால இத்தனை பேருக்கு செய்ய முடியாது. கைவலி இருக்குன்னு சொல்ல, நான் இட்டுத்தர்றேன் நீ சுட்டுத்தள்ளுன்னு சொல்லிட்டு ஒரு கிலோ மாவு பிசைஞ்சாச்சு.

திடும்னு அவங்களுக்கு ஏதோ பர்ச்சேஸ் செய்ய யோசனை வந்து நான் கடைக்கு போறேன்னு கிளம்பிட்டாங்க. கைவலியோட அத்தனை சப்பாத்தி தனியா செஞ்சு அவதி பட்டது தனிக்கதை. இப்படி நம்மளை பத்தி கவலைப்படாத விருந்தாளிகள் வந்தாக்க வீட்டுல இருக்கற நம்ம நிலமை என்ன ஆகும். அதே மாதிரி நாமளும் அடுத்தவங்களுக்கு தொல்லை கொடுக்கறோமான்னு யோசிச்சு பாத்திருப்போமா!!!

சரி அதுக்காக யார் வீட்டுக்கும் போகமலா இருக்க முடியும்? உறவுகள் வேணுமே. அதுக்கு தான் நானும் அயித்தானும் ஒரு ப்ளான் செஞ்சோம். எந்த ஊருக்கு போறதா இருந்தாலும் பட்ஜட் போட்டு அந்த ஊர்ல ஹோட்டல்ல தங்கிடறது. உறவினர் வீட்டுக்கு ஒரே ஒரு நாள் விசிட் அடிச்சு டின்னரோ, லஞ்சோ சாப்பிடறது. அப்புறம் அவங்களையும் வெளிய ஒரு நாள் அழைச்சுகிட்டு போறது. இதனால எங்களுக்கு தேவையான ரெஸ்ட் கிடைக்குது. ( வீட்டுல தங்க வந்துட்டோம் அப்படிங்கறதாலயே வீட்டு வேலை செய்ய வெச்சு பெண்டு கழட்டிட்டாங்க சில உறவூஸ் அதனால வந்த எக்ஸ்பீரியன்ஸ்) அவங்களும் நாம வந்திட்டோம்னு ஜெர்க் ஆவுறதில்லை.

எல்லோருக்கும் இது சாத்தியமான்னு கேக்கலாம்? ப்ராக்டிகலா யோசிச்சா நாம செலவு செஞ்சு தங்கும்போது அதிக நாள் தங்காம என்னென்ன பாக்கணும், எப்படி போகணும் எல்லாம் ப்ளான் செஞ்சு அதுக்கு தக்க அரேஞ்ச் செஞ்சிட்டு போகும்போது எல்லாம் பட்ஜட்ல முடிக்க முடியும். கொஞ்சம் முன்ன பின்ன ஆகலாம். ஆனா டூர் போகன்னு ப்ளான் செஞ்சு பணத்தை கொஞ்சம் கொஞ்சமா சேமிச்சு வெச்சு டூர் ப்ளான் போகலாம். இதனால நாம நிறைய்ய இடங்களை பார்க்க முடியும். தங்குறதுக்கு உறவுகள் இருக்கற ஊர் மட்டும்தான் போவோம்னு இல்லாம மத்த இடங்களையும் பார்க்கலாம்.

இன்னும் நிறைய்ய பேச இருக்கு. தொடரும்.......


No comments: