Thursday, July 24, 2008

விசுத்தி சக்ரம் - THROAT CHAKRA





விசுத்திச் சக்கரம் அமைந்திருப்பது நம் கழுத்தில்.
நம்மை அடுத்தவர்களுடன் தொடர்பு படுத்துவதில்
முக்கிய பங்கு வகிக்கிறது.

சரியாக, முறையாகப் பேசாவிடில் நாம் பேசும்
பேச்சே நமக்கு பேராபத்தை விளைவித்து விடும்.

நம்மைப் பற்றிக்கூற, பாடலைப் பாட,
இறைவனைத் தொழ இப்படி பல வகையில்
நமக்கு தொண்டைப் பகுதி உதவியாய் இருக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால் இந்த உலகத்தோடு
நம்மை தொடர்பு படுத்துகிறது.



இந்தச் சக்கரம் தைராய்டு சுரப்பியை கட்டு படுத்துகிறது.






குண்டலினி இந்தச் சக்கரத்தினுள் நுழைந்து வெளிப்படும்போது
மனிதன் சத்தியத்தை மட்டுமே பேசுபவனாகவும், தேவையில்லாத
வாக்குவதங்களைத் தவிர்த்து இனிய சொற்களைப் பேசி
அகந்தையை ஒழித்து அன்புடையவனாகிறான்.




லலிதா ஸகஸர்நாமத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஸ்லோகங்கள்:

98 மற்றும் 99.

விசுக்தி ச்க்ர நிலயா ரக்தவர்ணா த்ரிலோசனா
கட்வாங்காதி ப்ரஹரணா வதநைக ஸமன்விதா


Vishuddhi chakranilaya raktavarna trilochana
Khatvangadi praharana vadanaika samanvita .. 98



Vishuddhi chakranilaya: Who resides in the Vishuddhi Chakra.
Raktavarna: Who is of a rosy complexion
like the Patali flower.
Trilochana: Who has three eyes.
Khatvangadi praharana: Who is armed with
a club and other weapons.
Vadanaika samnvita: Who is with a single face.
*******************************************

பாயஸான்ன ப்ரியா த்வக்ஸ்தா பசுலோக பயங்கரி
அம்ருதாதி மஹாசக்தி ஸம்வருதா டாகினீச்வரி
.


Payasannapriya tvakstha pashuloka bhayankari
Amrutadi mahashakti samvruta dakinishvari .. 99



Payasannapriya: Who likes
offerings of Payasa (milk food).
Tvakstha: Who presides over the skin that
gives the sensation of touch.
Pashuloka bhayankari: Who is frightful
to the ignorant (Pashu).
Amrutadi mahashakti samvruta: Who is surrounded by
sixteen Saktis beginning with Amruta.

Dakinishvari: Who is the Divine Ruler Dakini.


விசுக்தி சக்ரத்தில் அம்ருதா எனும் தேவதையில் துவங்கி
16 தேவதைகளுடன் அமர்ந்திருக்கிறாள் அம்பிகை.
ஒரு முகத்துடன் ரக்த வர்ணத்தில் பாயாசான்னத்தை
விரும்பி ஏற்பவளாக இருந்து அருள் பாலிக்கிறாள்

இந்த சக்கரத்தின் தேவதைக்கு டாகினி என்று பெயர்.

***************

7 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மிகவும் எளிமையாக, புரியும்படி வந்திருக்கு அக்கா!

//Vishuddhi chakranilaya//

விசுத்தி சக்கரத்தில் மட்டும் தான் அம்பாள் எழுந்தருளி உள்ளாளா? இல்லை அனைத்துச் சக்கரங்களிலும் வெவ்வேறு பெயர்களில் வீற்றிருக்கின்றாளா?

pudugaithendral said...

வாங்க கே.ஆர்.எஸ்,

முதல் வருகைக்கு நன்றி.

pudugaithendral said...

குண்டலினி சக்தியாக இருப்பது அன்னையே.

ஒவ்வொரு சக்கரத்திலும் ஒவ்வொரு பெயரோடு, ஒவ்வொரு நிவேத்தியத்தோடு, வெவ்வேறு ரூபங்களில், தன் துணை சக்திகளோடு அருள் பாலிக்கிறாள்.

ambi said...

படித்து வருகிறேன். மிகவும் எளிமையாக, புரியும்படி வந்திருக்கு அக்கா!

pudugaithendral said...

வாங்க அம்பி வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

மங்களூர் சிவா said...

படித்து வருகிறேன்.

மங்களூர் சிவா said...

Next New TAG pls visit