Thursday, October 02, 2008

பக்த ராமதாஸ்

சபரியின் பரம்பரையைச் சேர்ந்த பொக்கல தம்மக்கா அவர்களின்
கனவில் இறைவன் தோன்றி தான் அடர்ந்த வனத்தில் இருப்பதாக
சொல்லியிருக்கிறார். மண்ணில் புதையுண்டு கிடந்த ராமனை
வெளியே எடுத்து பனைமரத்தின் அடியில் கீரை வேய்ந்து
கோயில் அமைத்து ஆராதித்து வந்தார்.

இவர்தான் அரசு வேலையாக வந்த ராமதாஸிற்கு ராமரைக்
காட்டினார். அவரிடமிருந்து ராமதாஸ் அந்த பொறுப்பை
ஏற்றார்.

ராமதாஸின் இயற்பெயர் ஸ்ரீ கான்செர்ல கோபண்ணா.
(1630 A.D)கோல்கொண்டா மஹாராஜா தானிஷா அவர்களின்
அரசாங்க அதிகாரியாக ”பலவஞ்சா” (பத்ராசலத்திற்கு
அருகில் இருக்கிறது) வருவாய்களை வசூலித்து வந்தார்.

ராம பக்தி மிகுந்த அவரிடம் தான் மண்ணில் கண்டெடுத்த
ராமரைப் பற்றி தம்மக்கா சொல்கிறார். உடனே
ராமருக்கு கோவில் கட்ட ஏற்பாடு செய்கிறார்.
காஞ்சிபுரத்திலிருந்து 5 வைணவ பூஜாரிகளை அழைத்து
வந்து ஆகம் முறைப்படி பூஜை ஏற்பாடுகள் நடக்க
வழி செய்தார்.




சிறந்த அறிவாளியான கோபண்ணா பல பாடல்களை
ராமரின் மேல் பாடியிருக்கிறார். “தாசர சத்கம்” என்று
புகழ் பெற்றிருக்கின்றன.

ராமாலயத்திற்காக அரசு நிதையை செலவழித்து
செவ்வனே செய்ததனால் அரசவைக்கு செல்ல வேண்டிய
நிதிகள் பல நாட்களாக வராததை கண்ட தானிஷா
விசாரித்து ராமதாஸரை கோல்கொண்டா
சிறையில் அடைக்கிறார்.

சிறையில் படும் சித்ரஹிம்சைகளை பாடல்களாக
பாடுகிறார்.

இக்சுவாகு குல திலக - எனும் பாடலில்
பரதனுக்கு செய்த “பச்சாகு பதக்கம்”
சீதாவிற்கு செய்த “சிந்தாகு பதக்கம்”
இவையெல்லாம் யார் செய்தார்கள்.
உன் அப்பனா, இல்லை மாமனா
நான் தானே செய்தேன்.செய்து
கொடுத்ததைப் போட்டுக்கொண்டு
ஒய்யாரமாக திரிந்தாயே! இப்போது
என்னை வந்து காப்பாற்றக் கூடாதா
என்று கேட்பார். மிக அருமையான பாடல்.

”நனு ப்ரோவமனி சொப்பவே சீதம்ம தல்லி”
(எனைக் காப்பாற்றும் படி சொல்லம்மா
சீதம்மா) என்று அவர் பாடியதும் சீதை
ராமனிடம் சொல்லி,” இப்படி இவரை
வதைப்பது தாங்காது” என்று கூற

சிரித்த வண்ணம் ராமர் பதிலுறுக்கிறார்.
“சுதந்திரமாக திரிந்த கிளியை பிடித்து
கூண்டில் அடைத்தான் கோபண்ணா.
அந்தப் பாவத்தைத்தான் இப்போது
அனுபவிக்கிறான். தெரிந்து செய்தாலும்
தெரியாமல் செய்தாலும் தவறு தவறுதான்”
என்று கூறி காவலாளிப் போல் தானிஷாவின்
படுக்கை அறையில் தோன்றி அரசவைக்கு சேரவேண்டிய
பணத்தை கொடுத்து ரசீதும் வாங்கிக் கொண்டு
வந்து அந்த ரசீதை சிறையில் இருக்கும்
ராமதாஸ் அவர்களின் தலையணைக்கு அடியில்
வைத்து விட்டு மறைகிறார்.

காலையில் விழுந்தடித்துக்கொண்டு வந்த
தானிஷா ராமதாஸின் பாதங்களில் வணங்கி
மன்னிக்க வேண்டுகிறார். அந்த தாலுக்காவில்
சேரும் பணம் கோவிலுக்கு செலவு செய்ய
உத்தரவிடுகிறார்.

பத்ராசலத்திற்கு திரும்பி வந்த ராமதாஸ்
கோவில் பணிகள் செவ்வனே நடக்க
ஏதுவாக அனைத்தும் செய்கிறார். இதைக்
கேள்வி பட்ட மக்கள் பத்ராசலத்திற்கு
பயணம் செய்து பகவானை தரிசிக்க ஆரம்பித்தனர்.
ஸ்ரீராம நவமி வெகு விமரிசையாககொண்டாடுகின்றனர்.

இன்றும் கோவிலில் ராமதாஸ் அவர்கள் செய்து
கொடுத்த நகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

சீதம்மாவிற்கு செய்து கொடுத்த தாலி தான்
இன்றும் ஸ்ரீராம நவமி அன்று கோவிலில் நடக்கும்
கல்யானோற்சவத்தில் சாற்றப்படுகிறது.

2 comments:

ராமலக்ஷ்மி said...

பகத ராமதாஸ் பற்றிய புராண விவரங்களுக்கு நன்றி தென்றல்.

pudugaithendral said...

அட!

தூக்கம் வராமல் நான் தான் இன்று 4 மணிக்கு பதிவு போட்டேன் என்றால், 6.09 மணிக்கு உங்களிடமிருந்து பின்னூட்டமா! வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.