Saturday, September 05, 2009

கொம்பனித் தெரு முருகன் தரிசனம்

லக்சல- இங்கே கைவினைப் பொருட்கள் நன்றாக இருக்கும்.
நண்பர்களுக்கு பரிசளிக்க வாங்கிக்கொண்டேன். வெகு நாட்களாக
தனியாக ஆடிக்கொண்டிருந்த கண்டி ஆண் நடனக் கலைஞருக்கு,
ஜோடி இப்போது தான் கிடைத்தது. இருவரும் சேர்ந்து ஆடும்
அழகைப் பாருங்கள்...



மாலையில் முருகனை தரிசிக்க திட்டம்

slave island அல்லது கொம்பனித் தெரு முருகன்
கோவில் எனக்கு மிகவும் பிடித்தமான இடம்.
முருகனுக்கு என இருக்கும் கோவில். மற்ற
தெய்வங்களும் இருக்கின்றன என்றாலும் ப்ரதானமாக
முருகன். 2001 பயணத்தின் போதிலிருந்தே இந்தக்
கோவில் பிடித்தமானதாக ஆகிவிட்டது.


செவ்வாய்க்கிழமைகளில் சஷ்டி கவசம் படித்தல்,
என எப்போதும் கோவிலில் கூட்டம் கணிசமாக இருக்கும்.
நான் சென்றது 16.8.09.
அதற்கு முதல் நாள் தான் தேரோட்டம் நடந்து முடிந்திருந்தது.
அருமையான தரிசனம். ஊஞ்சல் உற்சவம் நடந்து கொண்டிருந்தது.


மேரி எங்கள் வீட்டுப் பணியாளராக இருந்தவர். அவருக்கு போன்
செய்த பொழுது கொம்பனித் தெரு கோவில் வாசலில் காத்திருப்பதாகச்
சொன்னார். ஹோட்டலிலிருந்து நாங்கள் கிளம்பும் முன் அம்ருதாவுக்கு
தலைவலி அதிகமாக இருந்தது. மருந்து கொடுத்து சற்று படுக்க
வைத்து பிறகு செல்லாம் என திட்டம். எல்லோரும் தயாரா
என்று பார்க்க வந்த தேஜு அம்ருதா படுத்திருப்பதைப் பார்த்து
“என்னாச்சு?”என்று கேட்டு அம்ருதா பக்கத்திலேயே இருந்தாள்.

மழை வருவது போலிருந்தது. மேரி வேறு அங்கே காத்திருப்பாரே!!
அதனால் நான்,ஆஷிஷ்,அன்ணபூர்ணா,பானு நால்வரும் முதலில்
ரவி அண்ணா ஆட்டோவில் சென்று விட்டோம்.

தேஜு,அம்ருதா, பாலகிருஷ்னா, அயித்தான் கொஞ்சம் தாமதமாக
சுனில் ஆட்டோவில் வருவதாகச் சொன்னார்கள்.

கோவில் வாசலில் மேரி காத்திருந்தார். பார்த்ததில் ஒரே சந்தோஷம்.
ஆஷிஷை கண்டதும்,”தம்பி நல்லா வளந்துட்டீங்க. இனி என்னால்
உங்களுக்கு தலைக்கு எண்ணை வைக்க முடியாது” என்று சொன்னார்.
அம்ருதா எங்கே என்று கேட்க”தலைவலி கொஞ்சம் தாமதமாக வருவார்
என்று சொல்ல அம்ருதாவையும் பார்த்துவிட்டு போவதாகச் சொன்னார்.

10 நிமிடத்தில் அம்ருதாவும் வந்துவிட கட்டித்தழுவி முத்த மழைதான்.
எங்கள் வீட்டில் ஒரு நபராக இருந்தார் மேரி. மேரியப் பற்றி
முன்பே சொல்லியிருக்கிறேன்.

அங்கிருந்து இரவு உணவுக்கு செல்ல திட்டம்.
இந்த இடத்தில்சாப்பிடாமல் இலங்கை பயணம் முடிவடையக்
கூடாதுஎன்பது எங்கள் 8 பேருக்கும் எண்ணம்.:)

எங்கே போனோம் என்பதை அடுத்த பதிவில் சொல்றேன்.
அதற்கு முன் உணவகத்தில் காத்திருந்த நேரத்தில்
தேஜு எங்களுக்கு அளித்த கடிதம் இது.





”என்ன தேஜு!! ஒரே செண்டிமெண்டா லெட்டர்?” என்று கேட்க
”ஆமாம், அம்ருதா என் பெஸ்ட் ஃப்ரெண்ட்! சின்ன வயதிலேர்ந்தே
நாங்க ஒண்ணா இருக்கோம்ல, அம்ருதாவுக்கு உடம்பு சரியில்லைன்னா
கஷ்டமா இருக்கு!!!” என்றாள்.

தோழியின் தலைவலிக்கு வருந்தும் நட்பு. ஆண்டவன் அருள்.

தொடரும்..

2 comments:

மங்களூர் சிவா said...

இலங்கை பயணக்கட்டுரை இன்னுமா முடிக்கலை??
தொடரும் வேற??

:))

ரைட்டு :))

pudugaithendral said...

அம்புட்டு சீக்கிரம் முடிஞ்சிடுமா சிவா.

வருகைக்கு நன்றி