Tuesday, October 20, 2009

மனமே! உடலே! ரிலாக்ஸ் ப்ளீஸ்

ரிலாக்ஸ்- இந்த வார்த்தை சொல்லும்போதே அதுவும்
ரி...லா...க்ஸ் என கொஞ்சம் சுருதியாக சொல்லிப்பாருங்கள்
நிஜமாகவே ரிலாக்ஸ்டாக இருக்கும்.

5 நிமிஷத்துல ரெஃப்ரெஷ் ஆவுறது எப்புடின்னு பாப்போம்.

பயில்வான் ஒருவரை மல்யுத்தத்துல மடக்க முடியாத
எதிராளி பயில்வானிடம்,”அண்ணே, உங்க உடம்புக்கு
என்னாச்சுண்ணே? வியர்த்திருக்கு, ரொம்ப டயர்டா’
இருக்கீங்க? ஏதும் ப்ராப்ளமாண்ணே” என
வெறும் பேச்சாலையே அவரை புல்தடுக்கி பயில்வானாக்கிய
கதை அனைவருக்கும் தெரிந்ததே.


Positive thinking இது மிக முக்கியம்.
சோம்பி கிடக்கும் மனதுக்கு ஒரு புத்துணர்ச்சி
Positive thinkingனால் கிடைக்கும். எப்படி?
ஆண்டவன் நமக்கு அளித்திருக்கும் கொடை கற்பனை.
அதிகம் சத்தமில்லாத ஒரு இடத்தை தேர்ந்தெடுத்துக்கோங்க.
உங்களுக்கு மனதுக்கு பிடித்த காட்சி, இடம் இப்படி
ஏதாவது ஒண்ணை தேர்ந்தெடுத்து நீங்கள் அங்கே
போய் வருவது போல் கற்பனை செய்து பார்க்கணும்.





உதாரணமா, எனக்கு மிகவும் பிடித்தது கொழும்பு-கதிர்காமம்
பயணம். வலது புறம் கடலலைகள், இடது புறம் பச்சை பசுமை.
நடுவில் ஆனந்தமான பயணம். நீல நிறக் கடல்நீரில் வெயில்
பட்டு ஜொலிக்கும் அந்த ஜொலிப்பு.... இந்தப் பக்கம்
பச்சை பசேலென்று கண்ணுக்கு குளிர்ச்சியாய் இயற்கை வளம்.
முள்ளும் மலரும் சரத்பாபு போல “செந்தாழம் பூவில் வந்தாடும்
தென்றல்னு” பாடிக்கிட்டே ஒரு லாங்க் ட்ரைவ்.

அந்த நினைவுகளில் அப்படியே மூழ்கி வெளியே வரும்போது
ச்சும்மா ஃப்ரெஷ்ஷா இருக்கும். இது ஒரு வகை.


மற்றொரு வகை தூங்கப்போகும் முன் அல்லது சோர்வாக
இருக்கும் நேரங்களில் செய்யலாம்.

சவாசனம் போல படுத்துக்கொள்ள வேண்டும். படுக்க விருப்பமில்லாதவர்கள்
ரிலாக்ஸ்டாக நாற்காலியில் அமர்ந்துகொள்வது நலம்.

மிக மெதுவாக மூச்சை உள்ளிழுத்து,வெளியேற்ற வேண்டும்.



சரியான மூச்சுவிடும் முறை எது தெரியுமா?
மூச்சு உள்ளே இழுக்கும்போது வயிறு முன்னே
வரவேண்டும். வெளியே விடும்பொழுது வயிறு
உள்ளே செல்லவேண்டும். இந்த சுவாச முறையில்
நுரையீரல்களில் தேவையான சுவாச காற்று
செல்லும்.

TAKE A DEEP BREATH AND RELAX என்று மந்திரம்
போல் சொல்லிக்கொள்வது நலம் தரும்.

கண்மூடி புருவமத்திக்கு மனதை ஒருங்கிணைத்து
10-0 தலைகீழாக எண்ணி ஆல்ஃபா லெவலுக்குச்
சென்று NOW MY MIND IS GETTING RELAXED, NO
MORE TENTION என்று மனதுக்குள் சொல்லிக்கொள்ளவேண்டும்.

அப்படியே கண்களை சுருக்கி(டைட்டாக) விரித்து
கண்கள் ரிலாக்ஸாவதாக சொல்லவும்.

முகமலற சிரித்து, புன்னகையை முகம் முழுதும்
செலுத்தி புன்னகை நிறைந்த முகமாக்கிக்கொண்டு
முகத்துக்கு புத்துணர்ச்சி தரவும்.

கழுத்து, பின் கழுத்துஆகிய பகுதியில் கவனம்
செலுத்தி தசைகளை தளர்ச்சி அடைய செய்யவும்.

தோள்பட்டைகளை உயர்த்தி அப்படியே ரிலாக்ஸாக
விடவும்.

கைவிரல்களை மடித்து டைட்டாக மடிக்கவும்.
பிறகு மெல்லத் திறக்கவும்.

இருதயத்தில் அன்பு நிறைந்திருக்கட்டும்.
அன்பே கடவுள், அன்பே சத்தியம் என்று
சொல்லி நெஞ்சுப்பகுதியை இலகுவாக்கிக்கொள்ளுங்கள்.

மேலே சொல்லியிருக்கும் சுவாசப்பயிற்சி போல்
வயிற்றை இலகுவாக்கிக்கொள்ளவும்.

இடுப்பு பகுதியில் கவனத்தை கொண்டு சென்று
இடுப்பு தசைகளை தளர விடவும்.

அப்படியே தொடை, முழங்கால்கள் என
நிதானமாக சென்று பாதத்தை கீழ் நோக்கி
அழுத்தவும். பிறகு ரிலாக்ஸ்டாக விடவும்.

இப்போது அந்த நிலையிலேயே 2 நிமிடம்
இருக்கவும். கண்மூடி உள்ளுக்குள் நிகழும்
மாற்றத்தை அவதானித்துக்கொண்டு இருக்கவும்.

தசைகளில் இருக்கும் இறுக்கத்தைக் குறைக்கும்
இந்தப் பயிற்சியினால் தசை, மனம் இரண்டும்
ரிலாக்ஸாகிறது.

செய்துதான் பாருங்களேன்!!!

8 comments:

துளசி கோபால் said...

செஞ்சு பார்த்தேன்......

தூக்கம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

கொர் கொர்........

pudugaithendral said...

ஆஹா,

காலங்காத்தாலதூங்க வெச்சிட்டேனா.

வருகைக்கு நன்றி

ஈரோடு கதிர் said...

பயனுள்ள இடுகை

நன்றி

தாரணி பிரியா said...

பகிர்வுக்கு நன்றி தென்றல். நான் பயங்கர டென்சன் பார்ட்டி. முயற்சி செஞ்சு பார்க்கிறேன். நன்றி

pudugaithendral said...

வருகைக்கு நன்றி கதிர் சார்

pudugaithendral said...

முயற்சி செஞ்சு பார்க்கிறேன்.//

கண்டிப்பா செஞ்சு பாருங்க

butterfly Surya said...

thanx for sharing..

pudugaithendral said...

thanks surya