Tuesday, June 19, 2012

CURSIVE WRITING தேவையா??

பிள்ளைகளுக்கு பள்ளி துவங்கியாச்சு. எல்லா பெற்றோரும்
பிசியா இருக்கும் நேரம் இது. என் மனசுல ரொம்ப நாளா
ஓடிக்கிட்டு இருக்கற ஒரு கேள்விதான் இந்தப் பதிவு.

CURSIVE WRITINGல் தான் சில பள்ளிகளில் எழுத வேண்டும்னு
ரூலே வெச்சிருக்காங்க. ஆனா இந்த CURSIVE WRITING
தேவையா என்பதுதான் என் கேள்வி. இப்படி சேர்த்து
எழுதும் முறையை நாம அதிகமா எங்கேயும் உபயோகிப்பதில்லை.
இப்ப simple letters or printing letters இதுதான்
அதிகமா உபயோகத்தில் இருக்கு. ஏன் பிள்ளைகளின்
பாடப்புத்தகமே இந்த முறையில் தான் அச்சிடப்பட்டு இருக்கு.

அப்படி இருக்க கூட்டெழுத்து அல்லது சேர்த்தெழுதினாத்தான்
நல்லதுன்னு சொல்வதில் அர்த்தம் இல்லைன்னு எனக்குப் படுது.
அதுவும் இந்த எல்கேஜி பிள்ளைகளை கூட்டெழுத்து கத்துக்க
சொல்லி கட்டாயப்படுத்துவது மகா கொடுமை. அந்த வயசு
குழந்தைகள் பென்சிலையே பிடிக்க கூடாதுன்னு சொல்வேன்.
அப்படி இருக்க அவங்களுக்கு கூட்டெழுத்து கட்டாயமா
சொல்லிக்கொடுப்பதன் அவசியம் என்ன?



சில குழந்தைகளுக்கு எழுத வரும். சில குழந்தைகளுக்கு இப்படி
எழுத கஷ்டமா இருக்கு. b, d இந்த ரெண்டு எழுத்தையும் எழுதும்
பொழுது குழப்பமா இருக்கும். சேர்த்து வார்த்தைகள் எழுதும் பொழுது
படிக்க கஷ்டமா இருக்கும். அதைவிட கஷ்டம் பெற்றோருக்கு!!!
என்ன கேள்வி பதில் எழுதி வந்திருக்காங்கன்னு படிக்க
கஷ்டமோ கஷ்டம்தான். கூட்டெழுத்து நல்லா எழுத கற்ற பின்
எங்கே அதை உபயோகிக்க போறாங்க? கல்லூரிகளிலா? இல்லை
அலுவலகங்களிலா??

ஆங்கிலேயர்கள் டைப்ரைட்டர் கண்டுபிடிக்கும் முன்னாடி கூட்டெழுத்தில்
எழுதிக்கிட்டு இருந்தாங்க. "fair hand" அப்படின்னு சொல்வாங்க.
அதாவது எழுத்துக்கள் அழகா இருக்குன்னு அர்த்தம். ஆனா
அப்பக்கூட 2 ஆம் வகுப்புக்கு மேலதான் இந்த கையெழுத்துப்
பயிற்சியை பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்தாங்க. ஆனா
இப்ப பள்ளிகளில் எழுதுவதே CURSIVE தான்னு கஷ்டப் படுத்தறாங்க.
சிலருக்கு இப்படி எழுத முடியும். சிலருக்கு எழுத முடியாது.
கூட்டெழுத்துல எழுதுவது ரொம்ப ஈசியும் கிடையாது.

இப்ப கிளர்க் வேலையில் கூட எழுத்து வேலை குறைவு.
எல்லா இடத்திலையும் கணிணி ஆக்கிரமிச்சாச்சு. புத்தகங்கள்
எல்லாமே பிரிண்டிங் சிம்பிள் லெட்டர்ஸ்தான். அப்படி இருக்க
கூட்டெழுத்தில் எழுதக்கற்றுக்கொள்வதை கட்டாயம்னு சொல்வது
நியாயமே இல்லை. இப்ப பல இடங்களில் கூட்டெழுத்து முறை
குறைஞ்சுகிட்டே வருது. 2006 வருடத்தில் SAT
( standardized test for college admissions in the United States.)
15 சதவிகிதத்தினர்தான் கூட்டெழுத்துல எழுதியிருக்காங்க.

டிஸெலக்ஸியா பிள்ளைகளுக்கு எழுத்து என்பதே
கஷ்டமா இருக்கும். அப்படி இருக்க அவர்களை கூட்டெழுத்தில்
எழுதச் சொன்னா ரொம்ப கஷ்டம். நம் நாட்டில் எனக்குத்
தெரிந்து மாண்டிசொரி முறையில் பாடங்கள் ஆரம்ப
வகுப்புக்களில் நடத்தப்படுவதில்லை. அதாவது ஒரு
எழுத்தை தொட்டு உணர்ந்து, அதை பல முறை
பார்த்து அதன் பிறகு எழுதுவது. (என்னுடைய முந்தைய
மாண்டிசோரி கல்வி முறை பதிவுகளில் பார்க்கலாம்)

எடுத்த உடனேயே A,B,C, ஆரம்பிக்கறாங்க.
சில பள்ளிகளில் ஸ்ட்ரோக்ஸ் போடச் சொல்லிக்
கொடுப்பதே இல்லை. அதிலும் a,b,c ஈசியா இருக்க,
கேபிடல் ஏ,பி,சி ஆரம்பிச்சிருவாங்க. பாவம் பசங்க.

கையெழுத்து பயிற்சிக்காக பிள்ளைகள் விரும்பினா மட்டுமே
கூட்டெழுத்து சொல்லிக்கொடுக்கணும் என்பது என் எண்ணம்.
வற்புறுத்தாம விருப்பம் இருந்தா எழுதட்டும்னு சொல்லிக்
கொடுக்கலாம். நடைமுறை உபயோகத்தில் இருக்கும்
பிரிண்டிங் ஆல்ஃபபெட் எழுதப்பழகுவதில் எந்த தவறும் இல்லை.

அம்ருதா, ஆஷிஷ்ற்கு கர்சிவ் ரைட்டிங் தெரியாது. ஆனா
அவர்கள் இந்தியா வந்து பள்ளியில் சேர்த்த பொழுது
அதை அவர்கள் குற்றமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆஷிஷாவது
அப்போது 7ஆம் வகுப்பு. அம்ருதா 4 ஆம் வகுப்புதான்.
அவர்கள் பள்ளியில் ஆசிரியர்கள் ”முடிந்தால் ட்ரை செய்,
இல்லாவிட்டால் இப்படியே இருந்துவிடு ”என்று சொல்லிவிட்டார்கள்.
D'Nealian style of writing:

D'Nealian 1978ஆம் ஆண்டு இப்படி எழுதும் ஸ்டைலை
கொண்டு வந்தார்.



பிரிண்டிங் மெத்தட் இல்லாமல் கர்சிவ் ரைட்டிங்கும் இல்லாம
நடுவாந்திரமா இருக்கும் இந்த முறை பிள்ளைகள் கற்க
எளிதா இருக்கும்.

இந்த முறையில் எழுத சொல்லிக்கொடுப்பது நல்லா இருக்கும்னு
சில அறிஞர்கள், ஆசிரியர்கள் சொல்றாங்க. இந்த முறையில்
எழுத சொல்லிக்கொடுக்கும் பொழுது கையெழுத்து பார்க்க
அழகா இருக்கும். (ஆஷிஷ் அம்ருதா இந்த ஸ்டைல்லதான்
எழுதுவாங்க.)
இங்க போய் பாருங்க.

கூட்டெழுத்து கையெழுத்து போல வேணாம் நல்லா இருக்கும்.
நடைமுறைக்கு ஒத்துவராது, அதனால அதை கற்பது
கட்டாயம்னு சொல்லக்கூடாது என்பது என் எண்ணம்.
உங்க எண்ணத்தையும் சொல்லிட்டு போங்க.


13 comments:

சுரேகா.. said...

ரொம்ப சரி!!

டாக்டரானா புரியாத மாதிரிதான் எழுதப்போறாங்க!

என்ஜினியரானா கையெழுத்துப்போட மட்டும்தான் பேனாவை பயன்படுத்தப்போறாங்க!

எழுத்தாளர்கள் இப்போ கம்ப்யூட்டர்லயே எழுதிடுறாங்க!

கையால் எழுதவே வேலை இல்லை..!! இதுல எதுக்கு கர்ஸிவ் எழுத்துக்கள்?

சரியான அலசல்தான்..!!

நல்லது சொல்லியிருக்கீங்க!!

காற்றில் எந்தன் கீதம் said...

உண்மையிலேயே அவசியம் இல்லாத விஷயம் தான் புரியிற மாதிரி தெளிவ அழகா எழுத பழகினாலே போதும்...
அதுவும் எல் கே ஜி லேயே எழுத பழக்குறது அநியாயத்துக்கு அனாவசியம்.
அமிர்தனுக்கு எந்த காரணம் கொண்டும் எழுத கட்டாயப்படுத்த கூடாதுன்னு அவங்க ப்ளே ஸ்கூல் டீச்சர் கிட்ட ஸ்ட்ரிக்ட்டா சொல்லி இருக்கேன்... நீங்க மட்டும் தான் இப்பிடி சொல்லுற ஒரே பேரன்ட் அப்பிடின்னு சொன்னாங்க...ஹ்ம்ம் எண்ண பண்ண..

வெங்கட் நாகராஜ் said...

என்னக் கேட்டா எழுதத் தெரிந்தாப் போதும். கர்சிவ் தான் எழுதணும்னு படுத்தக் கூடாது....

இப்பல்லாம் பேனா புடிச்சு கையெழுத்து கூட போடறதில்ல... :)

pudugaithendral said...

வாங்க தலைவரே,

கையால் எழுதவே வேலை இல்லை..!! இதுல எதுக்கு கர்ஸிவ் எழுத்துக்கள்?
// அதேதான். :))

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க சுதர்ஷிணி,

அங்க பொதுவா மாண்டிசோரி பள்ளிகள்தானே!! அப்புறம் எழுத வற்புறுத்த சான்சே இல்லைன்னு நினைக்கிறேன். இருந்தாலும் நீங்க டீச்சர்கிட்ட சொன்னது ரொம்ப சரி.

pudugaithendral said...

நீங்க மட்டும் தான் இப்பிடி சொல்லுற ஒரே பேரன்ட் அப்பிடின்னு சொன்னாங்க.//

சேம் ப்ளட். நானும் இப்படித்தான் பேர் எடுத்திருக்கேன். என் குழந்தைகள் கற்கவேண்டும் அதே சமயம் அதிக ஸ்ட்ரெஸ் இல்லாமல். அதற்காக என்னால் செய்ய முடியுமோ அதை செய்துவிடுவேன்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க சகோ,

//இப்பல்லாம் பேனா புடிச்சு கையெழுத்து கூட போடறதில்ல... :)//

ஆமாம். டிஜிட்டல் கையெழுத்து காலத்துல கர்சிவ்ல எழுதணும்னு ஸ்கூல்ல படுத்தறாங்களே அதுக்கு யார்கிட்ட முறையிடலாம்!!!

வருகைக்கு நன்றி சகோ

ஹுஸைனம்மா said...

எல்.கே.ஜி.யிலேயே கர்ஸிவ் ரைட்டிங் சொல்லித் தருவது ஓவர்தான். இங்கு யூ.கே.ஜி. வந்தபின்தான் ஆரம்பம்.

(நோட்ஸ் எடுப்பது, பரிட்சை -இது போல) நிறைய எழுதும்போது கர்ஸிவ் ரைட்டிங்கில் எழுதினால் சீக்கிரம் எழுதிவிடலாம். இதுவே தனித்தனி எழுத்தாக எழுதிக் கொண்டிருந்தால் நேரமாகும். இது எனது அனுபவம். அதனால்தான் கர்ஸிவ்வை பழக்கப் படுத்துகிறார்களோ என்னவோ?

எப்படியும் கல்லூரி முடியும்வரை கையால் எழுதித்தானே ஆகவேண்டும். அதுக்காகவாவது திருத்தமா எழுதப் படிக்கணுமே.

எல் கே said...

திவ்யா இந்த வருசம்தான் எல் கே ஜி. நானும் பயந்துகிட்டு இருந்தேன். ஆனால் அவள் படிக்கும் பள்ளியில் இந்த வருஷம் எழுத வைக்க மாட்டோம்னு சொல்லிட்டாங்க. வீட்லயும் நாம கட்டாயப் படுத்த வேண்டாம்னு சொல்லி இருக்காங்க

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

யூகேஜி கூட ஓவர். 2 ஆம் வகுப்புக்கு மேல கர்சிவ் கொடுத்தா போதும். அப்புறம் ஈசியா பழகிடுவாங்க.
//எப்படியும் கல்லூரி முடியும்வரை கையால் எழுதித்தானே ஆகவேண்டும். அதுக்காகவாவது திருத்தமா எழுதப் படிக்கணுமே.//

வருகைக்கும் உங்க கருத்துக்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா

pudugaithendral said...

வாங்க எல்.கே,

திவ்யாவுக்கு அப்படி ஒரு ஸ்கூல் கிடைச்சது ரொம்ப சந்தோஷம்.

வருகைக்கு மிக்க நன்றி

அமுதா கிருஷ்ணா said...

என் அருமை மகன் நகுல் எழுதும் எழுத்தை ஒரு நாள் படம் பிடித்து போடணும்.அவ்வளவு லூசா,தனி தனியா எல்லா எழுத்துக்களும் இருக்கும். ஆனாலும் அவர் +2 accountancy, commerce ல் ஃபுல் மார்க் எடுத்தான். கையெழுத்து அழகாய் இருந்து ஃபெயில் ஆகும் குழந்தைகளும் இருக்கிறார்கள். பக்கம் பக்கமாய் எழுதுவது ஒரு வகையில் பனிஷ்மெண்ட் தான்.

pudugaithendral said...

வாங்க அமுதா கிருஷ்ணா,

கையெழுத்து அழகாய் இருந்து ஃபெயில் ஆகும் குழந்தைகளும் இருக்கிறார்கள். பக்கம் பக்கமாய் எழுதுவது ஒரு வகையில் பனிஷ்மெண்ட் தான்.//

கையெழுத்து அழகா எழுதணும்னு சில பிள்ளைகள் மெனக்கெட்டு பல கேள்விகளுக்கு விடை எழுத முடியாம போயிடும்!!!

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி