Tuesday, April 02, 2013

HI!!! TOURS!!!!

இந்த வாட்டி லீவுக்கு எங்க போறோம்?? இந்த கேள்வியை ஜனவரியிலேயே ஆரம்பிச்சாச்சு. காரணம் அடுத்த லீவில் அண்ணா நுழைவுத்தேர்வுகளில் பிசியா இருப்பாரு. செம டைட்டா இருக்கும். தவிர அம்ருதம்மாவும் பத்தாம் வகுப்புக்கு போறாங்க. யோசிங்கன்னுட்டு அயித்தான் அவுக வேலையை பாக்க போயிட்டாரு.

 எங்கங்க போகலாம்னு திட்டம் போட்டப்பவே இந்தியாக்குள்ள சுத்தினது இப்போதைக்கு போதும். புது பாஸ்போர்ட் வந்ததுக்கப்புறம் எங்கயும் போகலை, அதுல புது விசா, ஸ்டாம்ப் ஏதுனா இருக்கணும்!!!! :)) அப்படின்னு ஏகமனதா முடிவானிச்சு. எந்த ஊருக்கு போறது? இதைப்பத்தியும் கூடி ஆலோசிச்சு பேசினோம்.

 7 வருஷம் முன்னாடி சிங்கை, மலேசியா போனப்ப நாங்க பேக்கேஜ் டூர்ல்லாம் போகலை. நாங்களே ப்ளான் செஞ்சு, பேயிங் கெஸ்ட் அக்காமடேஷன் எல்லாம் கண்டுபிடிச்சு போனோம். இந்த வாட்டியும் அப்படியே செய்யலாமான்னு யோசிச்சு, போற இடத்தில் சுத்தி பாக்க என்னென்ன இருக்கு?ந்னு நானும் ஆஷிஷும் கூகுளாண்டவரைக்கேட்டு எக்ஸல் ஷீர் ரெடி செஞ்சு வெச்சோம். பட்ஜட் போட்டாச்சு.

சரி எதுக்கும் இருக்கட்டும்னு டூர் ஆபரேட்டர்ஸ்களையும் விசாரிச்சோம். பிரபலமான நிறுவனவங்கள் ரெண்டு, அப்புறம் சென்னையில் இருக்கும் அயித்தானின் நண்பர் வேலை பார்க்கும் கம்பெனி இவங்களுக்கு இத்தனாம் தேதியிலிருந்து இத்தனாம் தேதிவரைக்கும்னு சொல்லி என்னென்ன பாக்கலாம்னு கேட்டு விவரம் அனுப்பினோம்.


 பிப்ரவரி முதல்வாரத்தில் அம்ருதம்மாவின் பரிட்சை டைம்டேபிள் வந்து பாம் போட்டிச்சு. அம்ருதம்மாவோட பரிட்சை மார்ச் 11 முடிஞ்சு, 21 ரிசல்ட், புக்ஸ் வாங்கி, 25 லேர்ந்து ஸ்கூல். ஆஷ்ஷ் அண்ணாவுக்கோ 18 வரை பரிட்சை!!! இதுல எப்படி ப்ளான் செய்வது. இந்த லீவை விட்டா மண்டை காயும் வெயில் மாதமான மே மாதம் எங்கயும் போக முடியாது.....  எதேச்சையா காலண்டர் பாத்தேன். அம்ருதம்மாவுக்கு ஸ்கூல் திறந்த அந்த வாரம் ரெண்டு லீவு வந்தது. ஹோலி,  புனித வெள்ளி. 3 நாள் தான் ஸ்கூல் மிஸ்ஸாகும். முதல் வாரம் என்பதால உடனடியா பாடங்களும் ஆரம்பிக்க மாட்டாங்க.

ஹுர்ரேன்னு சொல்லி ரிசல்ட் வாங்கினதுக்கு அடுத்த நாள் கிளம்பினா ஒரு வாரம் எஞ்சாய் செய்யலாம். சனிக்கிழமை திரும்ப வந்ததும் ரெஸ்ட் எடுத்தா திங்கள் கிழமையிலிருந்து அம்ருதம்மா ஸ்கூல் போக ப்ராப்ளம் இருக்காது. திட்டம் ஓகேவாயிடிச்சு. டூர் ஆப்பரேட்டர்ஸ்களிடமிருந்து மெயில் வர ஆரம்பிச்சது. பிரபலமான கம்பெனிகளில் கொடுத்த பட்ஜட்டை பாத்தப்போ தலை சுத்தினச்சு. வேணாம் சாமின்னு சொல்லிட்டோம்.

அயித்தானின் நண்பர் வேலை செய்யும் கம்பெனியிலிருந்து வந்திருந்த பட்ஜட் கொஞ்சம் ஓகேவா இருந்தது. ஆனா அவங்க  சுத்தி பாக்க கொடுத்திருந்த இடங்கள் எனக்கு அவ்வளவா ஓகேவா இல்லை. நானும் ஆஷிஷும் சேர்ந்து போட்டு வெச்சிருந்த எக்ஸல் ஷிட்டை அவங்களுக்கு அனுப்பி இந்தந்த இடங்களை பாக்கணும்னு வெச்சிருக்கோம் இதுக்க தக்க போட்டு அனுப்புங்கன்னு சொன்னோம். ப்ளைட்ல டிக்கட் கிடைக்காது சார், சீக்கிரம் சொல்லுங்கன்னு சொல்ல அந்த டென்ஷன் எதுக்குன்னு அயித்தான் முதலில் போக வர ப்ளைட் டிக்கெட்டை புக் செஞ்சிட்டாரு. :))

ப்ளைட் நாங்க புக் செஞ்சிட்டோம், இப்ப டென்ஷன் இல்லாம நீங்க ஹோட்டல், சுத்தி பாக்கறது , விசா மட்டும் பாருங்கன்னு சொல்ல மெயில்கள் வர,போக இருந்தது. ஒரு ஸ்டேஜ்ல இவுக யாருமே வேணாம் நாமளே போவோம்னு முடிவு செஞ்சோம். அவுங்க அனுப்பின பட்ஜட்டுக்கும், நாமளே கிளம்பி போனா எம்புட்டு ஆகும்னு வொர்கவுட் செய்ய ஆரம்பிச்சோம்.

அப்பத்தான் பல தகவல்கள் கிடைச்சது. போக இருந்த தேசத்துல ஆன் அரைவல் விசா தர்றாங்கன்னு சொன்னாலும், ஏர்போர்ட்ல போய் வரிசையில் நின்னு விசா வாங்க குறைஞ்சது 1 மணி நேரம் ஆகும். அடுத்த கட்டமா
வெளி நாடுகளில் உள்ள ஹோட்டல்களுடன் இந்த டூர் ஆப்பரேட்டர்கள் டை அப் வெச்சுக்கறாங்க. இவங்க வருஷம் முழுங்க பல்க் புக்கிங் கொடுப்பதால், அவங்களுக்குன்னு ஷ்பெஷல் ரேட்ஸ் இருக்கும். நாம நெட்ல பாத்து புக் செய்யும்போது ரொம்ப டிஸ்கவுண்ட் கிடைக்காது. அயித்தானின் நண்பர் அந்த தேசத்து ஹோட்டலில் ஜீ எம்மா இருப்பவர் சொன்ன விஷயம் இது.

நாங்களே போனா டூர் ஆப்பரேட்டர் கொடுத்த பட்ஜட்டை விட 10000 ஜாஸ்தியா இருந்துச்சு. வேணாம் ரிஸ்குன்னு டூர் ஆப்பரேட்டர்கிட்டயே பயணத்தை ஒப்படைச்சாச்சு. மார்ச் 12 தேதிக்குள்ள விசா வாங்கி அனுப்பிட்டாங்க. எல்லாம் ரெடி.  காலை உணவு இலவசமா ஹோட்டலில் கொடுத்திடுவாங்க. மதியம், இரவு இந்திய உணவுக்கும் சேர்த்து நல்ல பேக்கேஜா கொடுத்தாங்க.

21ஆம் தேதி அம்ருதம்மா ரிசல்ட் வாங்க போனோம். க்ளாஸ் டாப்பர். :))
உடனடியா உக்காந்து புக்ஸுக்கெல்லாம  அட்டை போட்டு வெச்சிட்டோம். அதுக்கு முன்னாடியே பொட்டி கட்டியாச்சு. அந்த நாளும் வந்தது 22 நள்ளிரவு ஃப்ளைட். ஒரே எக்ஸைட்மெண்ட் எல்லோருக்கும். மதியம் நல்லா தூங்கினாத்தான் இரவு முழிக்க கஷ்டமா இருக்காதுன்னு ப்ளான்லாம் செஞ்சோம்.  :)) ஆனா பாருங்க தூக்கம் வரலை. இரவு உணவு முடிச்சு 9 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பியாச்சு. ஏர்போர்ட் போய் சேர்ந்து செக்கிங் ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் முடிச்சு  உக்காந்திருந்தோம்!!!!!

கரெக்டா 12.20க்கு அந்த விமானம் தரை இறங்கியது. 1 மணிக்கு நாங்கள் போர்டிங் ஆனோம். போன இடம் எங்கே?? போயிட்டு வந்துதானே பதிவு போடறேன். அதனால சஸ்பென்ஸெல்லாம் வெக்காம சொல்லிடறேன்.
கீழே விமானத்தை பாருங்க தெரியும். :))





பயண அனுபவங்கள் என் பார்வையில் வரும் பதிவுகளில் தொடரும்...... 




19 comments:

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா தாய் ஏர்வேஸ்... :)

நல்ல பயணம் தான். அனுபவங்களைக் கேட்க, படிக்க நாங்க ரெடி!

pudugaithendral said...

வாங்க சகோ,

ஆமாம் தாய் ஏர்வேஸில் தான் பயணம்.

வருகைக்கு மிக்க நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய பயணத்தை வரும் பதிவுகளில் காண காத்திருக்கிறோம்...

சாந்தி மாரியப்பன் said...

அனுபவங்களைக்கேக்க நாங்க ரெடி :-))

pudugaithendral said...

வாங்க தனபாலன்,

ரொம்ப காக்க வெக்காம தினம் ஒரு பதிவு வந்திடும். (சில சமயம் ரெண்டா கூட வரலாம்) :))

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

புகைப்படங்கள், மற்றும் பதிவுகளுடன் நானும் ரெடி :))

வருகைக்கு மிக்க நன்றி

அமுதா கிருஷ்ணா said...

"ஆன் அரைவல் விசா தர்றாங்கன்னு"

intha line padikum pothu thailand nu thonuchu..flight photo conform seithuchu...ready to read next post..

ADHI VENKAT said...

ஆஹா! சுற்றுலா அனுபவத்தை படிக்க நாங்க ஆர்வமுடன் தயாரா இருக்கோம்....:)

Anonymous said...

தாய்லாந்து?

pudugaithendral said...

வாங்க அமுதா கிருஷ்ணா,

ஆன் அரைவல் விசான்னாலும் அங்க போய் கட்டணம் செலுத்தத்தான் வேணும்னு சொன்னாங்க. அதுக்கு இங்கயே வாங்கிகிட்டு போயிடலாமேன்னு முடிவு செஞ்சோம்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க அமுதா கிருஷ்ணா,

ஆன் அரைவல் விசான்னாலும் அங்க போய் கட்டணம் செலுத்தத்தான் வேணும்னு சொன்னாங்க. அதுக்கு இங்கயே வாங்கிகிட்டு போயிடலாமேன்னு முடிவு செஞ்சோம்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க அமுதா கிருஷ்ணா,

ஆன் அரைவல் விசான்னாலும் அங்க போய் கட்டணம் செலுத்தத்தான் வேணும்னு சொன்னாங்க. அதுக்கு இங்கயே வாங்கிகிட்டு போயிடலாமேன்னு முடிவு செஞ்சோம்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க அமுதா கிருஷ்ணா,

ஆன் அரைவல் விசான்னாலும் அங்க போய் கட்டணம் செலுத்தத்தான் வேணும்னு சொன்னாங்க. அதுக்கு இங்கயே வாங்கிகிட்டு போயிடலாமேன்னு முடிவு செஞ்சோம்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

பதிவுகள் தொடர்கிறது

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க கடைசி பெஞ்ச்,

யெஸ்ஸூ தாய்லாந்தேதான். :))

வருகைக்கு மிக்க நன்றி

ஸாதிகா said...

suvaarSyamaaka solukinRiirkaL.thotarungkaL.

அன்புடன் அருணா said...

ம்ம்...நான் ரொம்ப லேட்டு!!!

வடுவூர் குமார் said...

tour Guide contact முடிந்தால் தனி மெயிலில் பகிரவும் (ஆட்சேபனை இல்லாவிட்டால்)குமார்72 அட் ஹாட்மெயில் டாட் காம்.
நன்றி.

pudugaithendral said...

வாங்க வடுவூர் குமார்,

இந்த தாய்லந்து பதிவுகளிலேயே டூர் ஏஜண்ட் விவரங்கள் கொடுத்திருக்கிறேனே.

இல்லாட்டி ஒரு மெயில் தட்டுங்க அனுப்பிடறேன்.

pdkt2007@gmail.com