Friday, November 29, 2013

சீதா கல்யாண வைபோகமே-8!!!!!!

சீதா கல்யாண வைபோகம் தொடர்கதையில் பெரிய இடைவெளி விழுந்துவிட்டது. இனி அப்படி நடக்காது என உறுதி கூறிக்கொண்டு முந்தைய பதிவுகளின் லிங்குகளுடன் தொடர்கிறது சீதா கல்யாணம். :)

 இப்படித்தான் இந்த கதை ஆரம்பமானது. 

  சீதா கல்யாண வைபோகமே - 1

சீதா கல்யாண வைபோகமே -2

சீதா கல்யாண வைபோகமே - 3

சீதா கல்யாண வைபோகமே - 4

சீதா கல்யாண வைபோகமே - 5

 சீதா கல்யாண வைபோகமே - 6

சீதா கல்யாண வைபோகமே - 7

சத்திரம் புக் செய்தாகிவிட்ட விஷயத்தை சம்மந்தி மணிக்கு போன் போட்டு சொன்னார் தியாகு. “ ரொம்ப சந்தோஷம். சத்திர முகவரியை இமெயில்ல அனுப்பிடுங்க. எங்களுக்கு பத்திரிகை பிரிண்ட் பண்ண வசதியாய் இருக்கும்னு” மணி சொல்ல ஓகே அப்படியே அனுப்பி வெச்சிடறேன்னு சொன்னார் தியாகு. சில வீடுகளில் இருவீட்டார் அழைப்புன்னு போட்டு பெண்வீட்டாரே பத்திரிகை அடிச்சு மாப்பிள்ளை வீட்டார்க்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு பத்திரிகை கொடுப்பாங்க. ஆனா இங்கே மணி எங்க பத்திரிகையை நாங்க அடிச்சிக்கிறோம்னு சொல்லியிருந்தார்.

கொஞ்ச நேரத்தில் சமையல் காண்ட்ராக்ட்காரர் வந்துவிட்டார். வந்தவருக்கு குடிக்க தண்ணீர் , காபி கொடுத்து பேச ஆரம்பித்தனர்.
”இப்பல்லாம் A to Z காண்ட்ராக்தான் சார்” உங்களுக்கு எந்த மாதிரின்னு சொல்லுங்க என்றது,”தெலுகு பத்ததி” அப்படின்னார் தியாகு.

”அவ்ளோதானே! என்று சொல்லி கையில் கொண்டு வந்திருந்த ஃபைலில் இருந்து பிரிண்ட் செய்த பேப்பரை கொடுத்தார். “தெலுகு பத்ததின்னா இன்னின்னது வேணும்னு ஒரு லிஸ்டே எங்க கிட்ட இருக்கு. தெலுங்கு பத்ததி தெரிஞ்ச தம்பதிகள் ரெண்டு பேரை உங்களுக்கு உதவிக்கு போடறேன். அந்தந்த ஃபங்ஷனுக்கு அந்தந்த சாமான் டக்கு டக்குன்னு வந்திரும்!! போதுமா!” என்றார். லிஸ்டை பத்மாவிடம் கொடுத்தார் தியாகு. பத்மாவும் பானுபின்னியும் படித்து பார்த்தனர். எல்லாம் சரிதான். “மாப்பிள்ளை வீட்டு சைட்ல சாட்டவாயனம் டப்பா& செட் அவங்களே வாங்கிக்கறதா சொல்லியிருக்காங்க, அதை குறைச்சிடுங்க.  தலைக்கு வைக்கும் பூ குறைவே இல்லாம இருக்கணும்னு சொன்னதும்,” அப்படியே செய்யலாம்மா. இந்த போட்டோக்களை பாருங்க. உங்களுக்கு எது பிடிச்சிருக்கோ அந்த மாதிரி மண்டப அலங்காரம் & மாலை ஆர்டர் பண்ணலாம் என்று சொல்ல அந்த போட்டோவை ஷ்யாம் வாங்கி சீதாவிடம் கொடுத்து இருவரும் பார்க்க ஆரம்பித்தனர்.

மெனு லிஸ்ட்டை காட்டி எதோ வேணுமோ அப்படி சொல்லுங்க செஞ்சு கொடுத்திடறேன் என்று சொல்ல, மெனு டிசைட் செய்தார்கள். ஜானவாசம் மாப்பிள்ளை அழைப்பு அன்று ரிஷப்ஷனும் இருப்பதால் நார்த் இண்டியன் வெரைட்டி சாப்பாட்டுக்கு ஆர்டர் செய்தார்கள். ‘ அநாவசியமா சாப்பாடு வேஸ்ட் ஆக கூடாது. இலையில் சாப்பிட முடியாத அளவுக்கு வெரைட்டிகளூம் கூடாது. திருப்தியா சாப்பிடும்படி இருக்கணும். மனசும் வயிறும் நிறையணும் ‘ என பத்மா சொல்ல “அவசியம். அப்படியே செய்யறேன் என்றார் கல்யாண காண்ட்ராக்காரர்.

” ஒரு வேளை மிஞ்சிய சாப்பாட்டை திரும்ப உபயோகப்படுத்த மாட்டோம்மா. பக்கத்துல இருக்கும் அனாதை ஆசிரமம், முதியோர் இல்லத்துக்கு உடன் அனுப்பிடுவேன். அந்த சார்ஜ் கூட உங்களுக்கு வராது” என்று சொல்ல ரொம்ப சந்தோஷம் என்று சொல்லி பட்சணங்கள் என்னென்ன தேவைன்னு கேட்க, பானுபின்னி, “ 5 சுத்து முறுக்கு, 7 சுத்து முறுக்கு (கை முறுக்கு), தேன்குழல், முள்ளுமுறுக்கு, லட்டு, சோமாசி,  மைசூர் பாகு இவை சீர் வைக்க எவ்வளவு, நம் தேவை எவ்வளவு, வருபவர்களுக்கு முறுக்கு லட்டு போட்ட பாக்கெட் எவ்வளவு எல்லாம் கரெக்டா கணக்கு போட்டு சொல்லும்மா பத்மா என்று சொல்ல, தன் கையிலிருந்த டைரி பார்த்து எவ்வளவு வேணும் என்று பானுபின்னியிடமும், தியாகுவிடமும் சரிபார்த்து சொல்ல காண்ட்ராக்ட் காரரும் குறித்துக்கொண்டார்.

எல்லா விவரமும் பேசியாச்சு. நீங்க பொண்ணை அழைச்சுக்கிட்டு சத்திரத்துக்கு வாங்க. எங்க வீட்டு கல்யாணம் மாதிரி எல்லாம் செஞ்சு கொடுக்கறேன். என்று சொல்லி அட்வான்ஸ் தொகை வாங்கிக்கொண்டு கிளம்பினார்.

ஷ்யாம் லாப்டாப்பை கொண்டு வந்து தான் போட்டு வைத்திருக்கும் எக்ஸல் ஷீட்டில் எல்லாவற்றையும் அப்டேட் செய்து கொண்டான். மெனு, பட்சண வகைகள், எல்லாமே எழுதிக்கொண்டார். வாங்கி பார்த்த சீதா,”ரொம்ப நல்லாயிருக்கு அண்ணா” என்றார். “எங்க காட்டு என தியாகுவும், பத்மாவும் வர சீதா காட்டினாள். எக்ஸல் ஷீட்டில் பொதுவான விவரங்கள், ஜவுளி விவரம், கல்யானமஹால் விவரங்கள், காண்ட்ராக்ட் எல்லாம் தனி தனி ஷீட்டில் அழகாக டைப் செய்து வைத்திருந்தான் ஷ்யாம். அழைப்பவர்கள் லிஸ்ட்டும் ஏரியா வைஸாக அதில் இருந்தது. இது கைல இருந்தா போதும்மா எல்லா வேலையும் செக் பண்ணி கரெக்டா முடிச்சிடலாம். செக்லிஸ்ட்டும் ரெடி செஞ்சுகிட்டு இருக்கேன்” என ஷ்யாம் சொல்ல ரொம்ப தேங்க்ஸ் கண்ணா என்றாள் பத்மா.

பத்மாவின் தம்பி மகன் பூணலுக்கு பானுபின்னி, தியாகு, பத்மா எல்லாரும் ரெண்டு நாள் முன்னாடியே போனார்கள். ஷ்யாமும், சீதாவும் ஃபங்க்‌ஷனுக்கு முதல் நாள் கிளம்பி போனார்கள். பூணல் முடிந்து எல்லோரும் ஓய்வாக உட்கார்ந்திருந்த நேரம் தியாகுவின் மொபைல் அழைக்க எடுத்து பேசினார்.
“அப்படியா!! ரொம்ப சந்தோஷம். வாழ்த்துக்கள். ரூபாவுக்கும் சொல்லிடுங்க “என்று சொல்லிவிட்டு சந்தோஷ முகத்துடன்  வந்து எல்லோருக்கும் தகவல் சொன்னார். “டில்லியில மாப்பிள்ளையின் அக்கா ரூபாவிற்கு பெண்குழந்தை பிறந்து தாயும் சேயும் நலம்” என்றதும் ரொம்ப நல்ல விஷயம் என்று சொல்லிக்கொண்டே சென்னைக்கு புறப்பட தயாரானார்கள்...

தொடரும்


8 comments:

இராஜராஜேஸ்வரி said...


"சீதா கல்யாண வைபோகமே
தென்றலாக இனிமை கூட்டியது..!

pudugaithendral said...

வாங்க இராஜராஜேஸ்வரி,

வருகைக்கு மிக்க நன்றி

அம்பாளடியாள் said...

சிறப்பான தொடர் இவை மென் மேலும் சிறப்பாகத் தொடர என் வாழ்த்துக்கள் தோழி .

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... தொடர்கிறேன்...

திண்டுக்கல் தனபாலன் said...

தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

pudugaithendral said...

வாங்க அம்பாளடியாள்,

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க தனபாலன்,

உங்களுடைய உதவிக்கும் வருகைக்கும் மனமார்ந்த நன்றிகள்

வெங்கட் நாகராஜ் said...

தொடரட்டும் சீதா கல்யாணம்....

த.ம. 2