Tuesday, January 17, 2017

கொடி அசைந்ததும் காற்று வந்ததா? பாகம் - 14

குழந்தையின் 0 - 14 வயதுகாலக்கட்டம் ரொம்பவே முக்கியம். பெற்றவர்களைப்பார்த்தும், தன்னை சுற்றி இருக்கும் சூழலில் இருந்தும் பல விஷயங்களை மனசுக்குள்ள டவுன்லோட் செஞ்சு வெச்சுக்கறாங்க. இதை அஸ்திவாரமா வெச்சுதான் அவங்க தன்னுடைய எதிர்காலவாழ்வை அமைச்சுக்கறாங்க. இப்படி இருக்கும்போது அவங்களுக்கு ஒரு ஆரோக்கியமான சூழலை அமைச்சுக்கொடுக்கணும். பெற்றவர்கள் தான் அவங்களுக்கு ரோல் மாடல். அதனால தாயும் தந்தையுமான பிறகு செய்யக்கூடிய ஓவ்வொரு செயலும் அதி ஜாக்கிரதையோட செய்யணும். அதனால ரொம்ப பொறுப்போட செய்லபடணும்.

பெரியவங்க ஒரு வசனம் சொல்வாங்க. அது “தானா பாதி தம்பிரானா பாதி”. நாமளா வரவழைச்சுக்கிற டென்ஷன் பாதி. ஆனா என்ன நம்மளை அறியாமலேயே அந்த டென்ஷனை நாம வரவழைக்கிறோம். அதுக்கு நம்முடைய வாழ்க்கை முறையும் ஒரு காரணம்.

முன்னெல்லாம் ஒரு தூர்தர்ஷன், ரேடியோ. செய்திகள் அதுல குறிப்பிட்ட நேரத்துல தான் வரும். இப்ப 24*7 டீவி சேனல்கள், ரேடியோ சேனல்கள். செய்திகளை முந்தித்தருவது நாங்கன்னு பெருமையா சொல்லிகொள்வாங்க. ஏதாவது ஒரு நிகழ்வு நடந்துட்டா அதைப் பத்தி காட்டின மனியம் தான். ஒரு பெரிய தலைவர் இறந்திட்டாங்கன்னா வேற எந்த நிகழ்ச்சியும் காட்ட மாட்டாங்க. ஏதாவது வாத்திய கச்சேரி அதுவும் ரொம்ப அதிர்வா இல்லாத நிகழ்ச்சியா இருக்கும். ரேடியோவுல இன்னென்ன வார்த்தைகள் தான் வரலாம்னு சென்சாரே இருக்கும். ( திருச்சி வானொலில சனிக்கிழமை சாயந்திரம் மழலைச் செல்வம்” நு நினைக்கறேன். அந்த நிகழ்ச்சியை சில குழந்தைகளை வெச்சு நடத்துவாங்க. அந்த நிகழ்ச்சியில என்னென்ன செய்யப்போறோம்னு மொத்தமா எழுதி அனுப்பனும். அவங்க அதை வாசிச்சு இந்த வார்த்தைகள் மாத்தணும்னு அனுப்புவாங்க. அதனால தெரியும்)

இப்ப பேச்சு சுதந்திரம் பத்திரிக்கை சுதந்திரம்னு சொல்லிக்கிட்டு எல்லாருமே கடுமையான வார்த்தை ப்ர்யோகங்களை உபயோகிக்கறது வழக்கமாச்சு.  டீஆர்பி ரேட்டிங் தான் முக்கியம். எல்லா சேனல்களுமே ஏதாவது ஒரு கட்சி சார்ந்திருக்கும். அதனால அடுத்த கட்சியை தாக்கி ஏசுவது பேசுவதுன்னு இருக்கும். நடுநிலையான சேனல்கள் ஏதுவுமே இல்லை. நாட்டு நடப்பு தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப அவசியம். ஆனா அதுக்காக வாத விவாதங்கள் எல்லாம் பார்த்து நம்ம பீபிய ஏத்திக்கணும்னு அவசியமில்லை.

சமீபத்தில் ஒரு வீடியோ பார்த்தேன். அவங்க ஒரு சத்சங்கத்தை சேர்ந்தவங்க. எனக்கு அவங்களைப்பத்தி ரொம்ப தெரியாது. வாட்சப்ல வந்த வீடியோ அது. அதோட சாராம்சம்,” நாம இப்ப பல தேவை இல்லாத விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதாவது தவறான விஷயங்கள் வீடியோவா அல்லது மெசஜ்களா நமக்கு வருது. (தவறு அவங்க சொல்வது தேவையில்லாத பேச்சுக்கள், அரசியலில் நிகழும் நிகழ்வுகள் அந்த மாதிரி) நாம அதை படிச்சிட்டு உடனே பலருக்கு ஷேர் செய்யறோம். உண்மையில் அதை எல்லோருக்கும் அனுப்பத்தேவையும் இருக்காது. ஆனா அனுப்பிவைப்போம். அதை அவங்க இன்னொருத்தருக்கு அனுப்புவாங்க. இப்படி இதை நம்மை அறியாமலேயே நெகட்டிவிட்டியை பரப்பிக்கிட்டு இருக்கோம். மொத்தத்தையும் படிச்சிட்டோ அல்லது பாத்துட்டோ டெலிட் செஞ்சிடறோம். உண்மையில் நம்ம மனசுலேர்ந்து அது டெலிட் ஆகாது.

இந்த மாதிரிதான் நாம தேவையில்லாத மன அழுத்தத்தை நாமளே வரவழைச்சுக்கிறோம். முதல் வரி படிக்கும்போதே நமக்கு தெரிஞ்சிடும் இது தேவையில்லாத விஷயம்னு மேற்கொண்டு முழுதும் படிக்காம அப்படியே டெலிட் செஞ்சிடறது தான் நல்லது. சமூக வலைத்தளங்களிலும் நம் கருத்தை கண்டிப்பா பதிவு செஞ்சே ஆகணும்னு ஏதுமில்லை.




நம் கருத்தை பதியும் உரிமை இருக்கு. நாட்டு நடப்பை தெரிஞ்சிக்கலாம். ஆனா அதுக்காக அதை வெச்சு பேசி, பதிவுகள் செஞ்சு, சமூக வலைத்தளங்களில் வாதங்கள் செஞ்சு ஏதும் பலனில்லை. இதை நான் செய்யணுமான்னு 4 தடவை கேட்டு பாப்போம். 4ஆவது தடவை இது தேவையில்லாத விஷயம்னு தோணும். முகநூலில் நம்ம சுவற்றுக்கு வந்ததும் what is on your mind அப்படின்னு பாக்கும்போது என் மனசுல என்ன இருந்தாலும் அதை நான் ஏன் இங்கே பதியணும் அப்படின்னுதான் தோணும்.  ஆனா சமூக வலைத்தளங்களிலும் நாம ஓரளவுக்கு அளவுகோளோட உலாவரலாம். நிறைய்ய கற்கலாம்னு புரிஞ்சது.

இந்த உறுதிக்கூற்றை நமக்கு அடிக்கடி சொல்லிக்கணும். நம்மால் ஹேண்டில் செய்யக்கூடிய விஷயங்களுக்கு மட்டும் தான் நமது எனர்ஜியை செலவு செய்யணும். நம்மால ஏதும் செய்ய முடியாத நிலைக்கு நாம ஏன் வருத்தப்படணும். நாம காலப்போக்குல ஒரு விஷயத்தை மறந்திட்டோம். அது இதுதான்.


தீயவற்றை பேசாதே, தீயவற்றை பார்க்காதே, தீயவற்றை கேட்காதே. இதை மறந்ததாலதான் நாம மன அழுத்தத்தை வரவழைச்சுக்கிறோம். நம்ம பொன்னான நேரத்தை தேவையில்லாத விஷயத்துல செலவு செய்யறோம்.


இப்ப இப்படியும் சொல்லிக்கலாம். நாம எதை பார்க்கணும், எதை பேசணும், எதை கேட்கணும் இதை நாமதான் தெளிந்த மனதோட முடிவு செய்யணும். அப்ப நமக்கு தேவையில்லாத மன அழுத்தத்தை நாம வரவழைச்சுக்க மாட்டோம்.  செய்யக்கூடிய விஷயம் தான்.


2 comments:

ஸ்ரீராம். said...

உண்மைதான். குழந்தைகள் பெரியவர்களைப் பார்த்துதான் தங்களை தகவமைத்துக் கொள்கிறார்கள் என்றாலும் பதின்ம பருவத்தில் அவர்கள் பார்வை மாற்றம் அடைகிறது. நல்ல பதிவு.

PUTHIYAMAADHAVI said...

Good .. sometimes we tensed unnecessarily.