Tuesday, January 03, 2017

கொடி அசைந்ததும் காற்று வந்ததா பாகம் - 7

தன்னலம் கருதாமல் பிறர்நலம் பேணனும் அப்படின்னு தான் எல்லோருக்கும் சொல்லி கொடுத்திருக்காங்க. இந்த தன்னலம் பார்க்க கூடாது என்பதன் விளைவாக நாம அடுத்தவங்களுக்கு உதவி செய்யணும், நல்லது செய்யணும்னே இருந்திடறோம். ஆனா சுயத்தை தொலைச்சிடறோம்.

இந்த சுயம் தொலையும்போது ஏற்படும் வெறுமைதான் நம்மை பாதிக்குது. பணம் சம்பாதிக்க கத்துக்கிட்டோம், சக்சஸா எப்படி இருப்பதுன்னு கத்துகிட்டோம். ஆனாலும் உள்ளே ஒரு வெறுமை ஓடும். அது எதனால. சுயத்தை தொலைச்சிட்டோம்.

ஃப்ளைட்ல போகும்போது அவசரத்துக்கு வந்து விழும் ஆக்சிஜன் மாக்ஸை முதலில் நீங்க மாட்டிக்கங்க அப்புறம் அடுத்தவங்களுக்கு உதவுங்கன்னு சொல்வாங்க. நாம ஒழுங்கா மூச்சு விட முடிஞ்சாதான் அடுத்தவங்களுக்கு உதவும் முடியும். இதுதான் சரி. நம்மை கவனிக்காம, நமக்கு முடியாட்டாலும் அடுத்தவங்களுக்கு செய்தால்தான் நாம நல்லவங்க. இல்லாட்டி நம்மளை சுயநலமிக்கவங்கன்னு முத்திரை குத்திடுவாங்க அப்படின்னு பயந்து ஒரு வாழ்க்கை வாழறோம்.

சிலர் இந்த முத்திரைக்கெல்லாம் பயப்பட மாட்டாங்க. என்னால முடியாதுன்னா முடியாது தான். அப்படின்னு கறாரா சொல்வாங்க. ஆனா சிலர் ஏச்சுக்கும் பேச்சுக்கும் பயந்து நோ சொல்ல மாட்டாங்க. வேறொரு சிலரோ அன்பின் காரணமா நாம நோ சொல்லிட்டா அவங்க தப்பா நினைச்சுக்கிட்டா எப்படின்னு நினைப்பாங்க. ஏதோ ஒரு காரணம் நம்மளை கவனிக்காம அடுத்தவங்களுக்கு செய்வோம்.

உளவியாளர்கள் சொல்றது என்னன்னா முதல்ல தன்னை நல்லா கவனிச்சுக்கிட்டாதான் அடுத்தவங்களை நல்லா கவனிக்க முடியும். தன் மேல அன்பு செலுத்த தெரிஞ்சாதான் அடுத்தவங்க மேல அன்பு செலுத்த முடியும். அப்படின்னு சொல்லியிருக்காங்க.

நான் யார்னு உணரனும்னா இதற்கு  SELF LOVE. ரொம்ப முக்கியம். சுயமரியாதை (self esteem) க்கும் SELF LOVEக்கும் தொடர்பு ரொம்ப உண்டு. SELF LOVE இதை நாம வளர்த்துக்கிட்டா மன அழுத்தம் குறையும். ஒரு நேர்மறை தன்மை நமக்கு கிடைக்கும். நாம சுயநலமா இருக்கணும்னு சொல்வது இல்லை SELF LOVE. நாம சந்தோஷமா இருந்தாதான் அடுத்தவங்களையும் சந்தோஷமா வெச்சுக்க முடியும். ஒரு மகிழ்வான வாழ்க்கை கிடைக்கும். நம்மளை கருணையா பாத்துக்க ஆரம்பிச்சாதான் அதை நம்மளால அடுத்தவங்களுக்கும் கொடுக்க முடியும். ஆனா இதுவே அதிகமாகம பாத்துக்கணும். எதுவும் ஒரு லிமிட்ல இருக்கணும். நூழிலை வித்தியாசத்துல சுயநலமா மாறக்கூடிய இந்த விஷயம் SELF LOVE.

சிலர் நான் எதுக்குமே உதவ மாட்டேன். என்னால எதுவும் நல்ல படியா செய்ய முடியாது. துயரமிகு உறவு அல்லது நட்பால இனிமே எனக்கு நல்லவங்க சகவாசமே கிடைக்க போறதில்லைன்னு முடிவுக்கு வந்திருப்பாங்க. இதைல்லாம் மறைஞ்சு என்னை நானாக இந்த உலகம் ஏத்துக்கும். நானும் நல்லா இருப்பேன். நல்ல உறவுகள் நட்புக்களால் ஆசிர்வதிக்கப்படுவேன்னு ஒரு நம்பிக்கை தர இது உதவும். அன்பையே அனுபவிச்சது இல்லைன்னு வருத்தப்படறவங்களுக்கும்SELF LOVE ரொம்ப முக்கியம்.  இதற்கு  உளவியலாளர்கள் தெரப்பில்லாம் கொடுக்கறாங்க.

நீ எதுக்கும் உதவ மாட்ட,  இவன் கிட்ட ஒரு வேலை கொடுத்தா ஒழுங்கா முடிக்க மாட்டான் இப்படி பல எதிர்மறை விமர்சனங்களால நம்ம சுயமரியாதை பாதிக்கப்படுது அதோட சேர்த்து SELF LOVE. நான்லாம் இனிமே அவ்வளவுதான் அப்படின்னு என்னத்த கன்னைய்யா ரேஞ்சுக்கு புலம்புவாங்க.

ஒரு கண்ணாடியைப் பார்த்து கிட்டு நிக்கணும். உங்க கண்களை நேரா சந்திச்சு உங்களை ரசிக்க ஆரம்பிங்க. காலையில ப்ரஷ் செய்யும் போது ஹாய், குட்மார்னிங் சொல்லாம். உங்க கண்களை நேரா பாத்து சில நேர்மறை உறுதிக்கூற்று வாக்கியங்களை சொல்லலாம். இது ரொம்ப பலன் தரும்.

1. I love you.I love and accept you as you are.
Say it loudly 10 times.

உன்னை நீயாகவே ஏற்றுக்கொண்டு உன்னை நான் நேசிக்கிறேன்.

2. I am willing to release the need to be unworthy. I am worthy of the very best in life and I now lovingly allow myself to accept it.

நான் எதற்கும் உதாவாதள்/ன் எனும் நினைப்பை உதறிவிட தயாராக இருக்கிறேன். நான் வாழ்க்கையில் அனைத்து  மகிழ்ச்சிக்கும் தகுதியானவன்/ள், என்னை அன்புடன் ஏற்றுக்கொள்ள அனுமதிக்கிறேன்.

இப்படி ஒரு மாசம் சொல்லிப் பாருங்க. வித்தியாசம் புரியும்.

ரொம்ப முக்கியமா மனசுக்கு பிடிச்சதை சாப்பிடுங்க. நல்லா உடை உடுத்துங்க. நாம உடுத்தும் உடையின் நிறத்தை வெச்சு நம்ம மூடை சொல்லலாம். ப்ரைட் கலர்லஸ் பெஸ்ட். நல்லா தலை சீவி ,பளிச்சுன்னு முகம் கழுவி எப்பவும் ஃப்ரெஷ்ஷா இருக்க பாருங்க. உங்களை பாக்கும் போது உங்களுக்கு ரொம்ப பிடிக்கணும். அதுதான் முக்கியம்.

முக்கியமா ஹோம் மேக்கர்ஸ். வீட்ல தான இருக்கோம்னு ஏனோ தானோன்னு இருக்காம ஆபீஸ் போறமாதிரி நல்லா உடை அணிஞ்சுக்கோங்க. நமக்கு வீடே தான் ஆபிஸ்.     Always working from home . என்ன நமக்கு சம்பளமா பணமா இல்லாம அன்பால கிடைக்குது. பிள்ளைங்க கழுத்தை கட்டிப்பதை விடவா ஒரு அழகான நமக்கு இருந்திடப்போகுது. எஞ்சாய்.

நமக்கு பிடிச்சதை உடுத்தறோம். பிடிச்சதை அளவோட சாப்பிடறோம். நம்மை கவனிக்கும் முதல் ஸ்டெப்பா உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்கறோம். மகிழ்ச்சியா  இருக்கோம்.  start to love yourself.





3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

// ஆனாலும் உள்ளே ஒரு வெறுமை ஓடும். அது எதனால. சுயத்தை தொலைச்சிட்டோம். //

100% உண்மை...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அருமையான உளவியல் நோக்கு.

pudugaithendral said...

நன்றி தனபாலன்

நன்றி ஜம்புலிங்கம் ஐயா